பால் குடித்தால் இப்டில்லாமா நடக்கும்... உணர்த்தும் சில அறிகுறிகள் !





பால் குடித்தால் இப்டில்லாமா நடக்கும்... உணர்த்தும் சில அறிகுறிகள் !

0

பால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பால் மிகவும் முக்கியமான பானம். 

பால் குடித்தால் இப்டில்லாமா நடக்கும்... உணர்த்தும் சில அறிகுறிகள் !

என்ன தான் பால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு நல்லது என்றாலும், அந்த பாலைக் குடிப்பதால் பல வழிகளில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

பாலில் எவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளதோ, அதே அளவில் மறைமுகமாக பிரச்சனைகளும் நிறைந்துள்ளன. அதற்காக பால் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதில்லை. 

பாலில் உள்ள நன்மைகளை எப்படி நாம் அறிந்திருக்கிறோமோ, அதேப் போல் அதனால் சந்திக்கும் பிரச்சனைகளையும் நாம் அறிந்திருக்க வேண்டும். 

பால் குடிப்பதால் சிலருக்கு செரிமானப் பிரச்னை உண்டாகும்

அதிக அளவில் பால் குடிப்பதால் சிலருக்கு செரிமானப் பிரச்னை உண்டாகும். வாந்தி, குமட்டல், வயிறு மந்தமாக இருப்பது போல் உணர்ந்தால் அதிகம் பால் எடுத்து கொள்வதை தவிர்த்து விடுங்கள். 

சிலருக்கு பால் குடிப்பதால் ஒவ்வாமை, சரும அலர்ஜி உண்டாகும். ஒரு நாளைக்கு மூன்று வேளை பால் குடித்தால் நல்லது என்பது நமக்கு பாப்பா காலத்திலே சொல்லப்பட்ட வரலாறு. 

அந்தளவிற்கு பாலை அதிகமா குடித்தால் நம் உடம்பிற்கு அதிக சத்துக்களை தருகிறதா என்று நினைத்தால், நிச்சயம் இல்லை என்பது தான், தவிர்க்க முடியாத உண்மை. 

பால் நம் உடம்பிற்கு அதிக சத்துக்களை தருகிறதா?

ஏனெனில், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சி, என்கிற பழமொழிக்கு ஏற்ப, அதிக சத்துக்கள் நிறைந்த பால் அருந்துவது கூட 

சில சமயங்களில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, 

கீழே எந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருவர் பால் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்த தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு

குழந்தைகளின் வளர்ச்சிக்கு

பாலை ஒரேயடியாக குடிக்காமலும் இருக்கக்கூடாது. ஒரு சிலர் சுத்தமாக பாலை தொடவே மாட்டார்கள். அப்படி குடிக்காமல் இருந்தாலும் உடலில் லாக்டோஸ் பற்றாக்குறையும் ஏற்படும். 

ஏனெனில், பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் ஏ, விட்டமின் டி, ரிபோப்ளவின், விட்டமின் பி12, புரோட்டீன், 

பொட்டாசியம், சின்க், கோலின், மெக்னீசியம், செலீனியம் என நம் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும் இதில் இருக்கிறது. 

அதனால் தான் ஒன்பது வயது வரை ஒரு நாளைக்கு மூன்று வேளையும் நம்மை பால் குடிக்க சொல்வார்கள். பால் நம் இளம்வயது வளர்ச்சிக்கும் பெரிதும் உறுதுணையாக இருக்கிறது.

சோர்வாக உணர்வது

சோர்வாக உணர்வது

பாலில் ஓபியேட் மூலக்கூறுகள் உள்ளன. இது தான் ஒருவரைத் தூங்க வைக்கிறது. விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், இது உண்மையில் ஒருவரைத் தூங்க வைப்பதில்லை. 

பால் ஜீரணிக்க கடினமாக இருப்பதால், அதை உடைக்க ஆற்றலை உருவாக்க முயற்சிப்பதன் மூலம், உடல் சோர்வடைகிறது. இதனால் ஒருவரது தூக்க சுழற்சி சீர் குலைக்கிறது. 

எனவே நீங்கள் நல்ல ஆழமான தூக்கத்தைப் பெற விரும்பினால், ட்ரிப்டோஃபேன் நிறைந்த பழங்கள் மற்றும் 

காய்கறிகளான ப்ராக்கோலி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம் அல்லது ஆப்பிள் போன்றவற்றை சாப்பிட முயற்சிக்கலாம்.

தசை மற்றும் மூட்டு வலிகள்

தசை மற்றும் மூட்டு வலிகள்

பால் அதிக அமிலத்தன்மை கொண்டதாக இருப்பதால், இது வீக்கத்தை ஏற்படுத்தி, மூட்டுக்களையும் தசைகளும் காயப்படுத்துகிறது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. 

எனவே நீங்கள் உடற்பயிற்சி செய்து, உங்கள் உடல் வலி மற்றும் தசைகளில் ஏற்பட்ட காயங்களில் இருந்து விரைவில் மீள வேண்டுமானால், பால் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

பருக்கள் அதிகமாக வருவது

பருக்கள் அதிகமாக வருவது

பல ஆய்வுகள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் டீனேஜ் வயதினர் மற்றும் இளைஞர்களிடையே முகப்பருவின் தீவிரத்தை அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது. 

கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் இன்சுலின் மற்றும் ஐ.ஜி.எஃப் -1 போன்ற ஹார்மோன்களில் செல்வாக்கு செலுத்துவதால், 

இது உங்கள் சரும ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. எனவே அதிக பருக்களைக் கொண்டவர்கள் பால் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

செரிமானம் சீராக இல்லாமல் இருப்பது

செரிமானம் சீராக இல்லாமல் இருப்பது

பால் அதிகமாக குடிக்கும் போது நம் உடம்பில் இந்த பிரச்சனை உருவாகிறது. எனெனில், அளவு மிகுந்த லாக்டோஸை உடலானது கிரகிக்க முடியாது. 

அப்போது உடல் உறுப்புக்களில் வீக்கம், செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும். 

இதனால், வயிற்றில் வாயு பிரச்சனை அதிகமாவதோடு, உடம்பிலுள்ள நல்ல பாக்டீரியாக்களையும் அழிக்கிறது.

மந்தமாக இருப்பது

மந்தமாக இருப்பது

மந்தமாக இருப்பது என்பது நோயல்ல. ஆனால் அது ஒரு அறிகுறி. இது நினைவாற்றல் பிரச்சனை, கவனம் செலுத்த முடியாமை மற்றும் மன தெளிவின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. 

வேறு பல காரணங்களால் இது ஏற்படுவதாக இருந்தாலும், பாலில் அதிகளவில் கேசீன் இருப்பதால், அதிகமாக பால் குடிப்பது மந்த நிலையைத் தூண்டி விடலாம். 

பல ஆய்வுகளும் பால் குடிப்பதைக் குறைத்துக் கொள்வது மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறுகிறது.

இதய பாதிப்பு

இதய பாதிப்பு

பால் குடிச்சா உடம்பு கெடுமா? நம்புற மாதிரி இல்லையே, ஆதாரம் இருக்கா என கேட்பவர்களுக்காகவே, 

2014ல் ஸ்வதீஸ் அறிவியல் ஆய்வாளர் கார்ல் மைக்கேல்சன் பால் குடிப்பது குறித்த தனது ஆய்வில், ”நாம் பாலை குறைந்த அளவு குடிப்பதே நம் உடலிற்கு போதுமானது அந்தளவே நமக்கு நல்ல சக்தியை தருகிறது. 

அதை தவிர்த்து பெண்கள் ஒரு நாளைக்கு மூன்று டம்ளர் அல்லது அதற்கும் மேல் பாலை அருந்தினால் அவர்களுக்கு பல உடல் உபாதைகளை தருகிறது. 

குறிப்பாக இருதயத்தில் பிரச்சனை, அத்தோடு 44 சதவீதம் புற்றுநோய் வருவதற்கும் பால் ஒரு காரணமாக இருக்கிறது” என அறிவுறுத்தியுள்ளார்.

அலர்ஜி மற்றும் பிற சரும பிரச்சனைகள்

அலர்ஜி மற்றும் பிற சரும பிரச்சனைகள்

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற லாக்டோஸ் சகிப்புத் தன்மைக்கான அறிகுறியும், பால் அலர்ஜிக்கான அறிகுறியும் ஒரே மாதிரியாக இருப்பதால், பலர் குழப்பமடையக் கூடும். 

5% குழந்தைகளுக்கு பால் அலர்ஜி இருக்கும் போது, இளம்பருவத்திலும் இது உருவாகலாம். எக்ஸிமா போன்ற தோல் அழற்சி கூட பால் அலர்ஜியால் ஏற்படலாம். 

எனவே உங்களுக்கு அலர்ஜி பிரச்சனைகள் இருந்தால், பால் பொருட்களை உங்கள் உணவில் இருந்து நீக்கி பாருங்கள்.

உயர் கொலஸ்ட்ரால் 

உயர் கொலஸ்ட்ரால்

இரத்த ஓட்டத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உணவில் இருந்து நேரடியாக வருகிறது. யு.எஸ்.டி.ஏ படி, 100 கிராம் பசும்பாலில் 10 கிராம் கொழுப்பு உள்ளது. 

எனவே ஒருவர் அதிகளவு பால் குடித்தால், அது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

எலும்பு முறிவு அல்லது எலும்பு உடைவது

எலும்பு முறிவு அல்லது எலும்பு உடைவது

பால் குடிப்பதால் எலும்புகள் உறுதியாகும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே சமயம் அதிக பால் குடிப்பதால் எலும்புகளுக்கு ஆபத்தும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாம்.

எலும்புகளின் வளர்ச்சி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் முக்கியமான அடிப்படைச்சத்து. குறிப்பாக குழந்தைப் பருவத்தில் இச்சத்து மிகவும் இன்றியமையாதது. 

ஆனால் அனைத்து பால் பொருட்களும் அல்லது விலங்கு புரோட்டீன்களும் அமிலத்தன்மை கொண்டவை. இது கால்சியம் உட்கொள்ளலைக் குறைக்கும். 

ஒரு நாளைக்கு 3 டம்ளருக்கும் அதிகமான பால் குடிக்கும் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

உடல்நலக் குறைவு ஏற்பட்டால் விரைவில் குணமாகாமல் இருப்பது

உடல்நலக் குறைவு

இந்த விஷயத்தில் பாலை மட்டும் குறை கூறக்கூடாது. ஏனெனில் மாடுகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டி பயாடிக்குகள் மறைமுகமாக நமது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. 

ஒரு புறம் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு மருந்து இன்றியமையாதது. ஆனால் மறுபுறம் இது ஆன்டி மைக்ரோபியல் எதிர்ப்பு பாக்டீரியாக்களின் வளர்ச்சியை உண்டாக்குகிறது. 

மனித உடலுக்கு புரோபயோடிக்குகள் நன்மை விளைவிப்பவையாக இருக்கும் போது, இந்த ஆன்டி மைக்ரோபியல் எதிர்ப்பு பாக்டீரியா அப்படியே நேர்மாறானவை. 

எனவே ஒரு நோயில் இருந்து விரைவில் மீள வேண்டுமானால், பால் குடிப்பதை சற்று குறைத்துக் கொள்வது நல்லது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)