சுவையான நெய் புலாவ் செய்வது எப்படி?





சுவையான நெய் புலாவ் செய்வது எப்படி?

0

புலாவ் சாதம் என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு ஆகும், இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிருவார்கள்.

சுவையான நெய் புலாவ்

மேலும் புலாவ் சாதம் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் என்பதால் கண்டிப்பாக இதை ஒரு முறையாவது நீங்கள் வீட்டில் பண்ணி பாருங்க.

சரி, இந்த சுவையான புலாவ் சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்…

தேவையானவை: 

பாசுமதி அரிசி - 2 கப், 

பெரிய வெங்காயம் - 3, 

பச்சை மிளகாய் - 4, 

உப்பு - தேவையான அளவு, 

புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி.

தாளிக்க:  

நெய் - 4 டேபிள் ஸ்பூன், 

பிரிஞ்சி இலை - 1.

அரைக்க: 

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2 (தனியாக அரைக்க வேண்டும்), 

இஞ்சி - ஒரு துண்டு, 

பூண்டு - 4 பல் (தனியாக அரைக்க வேண்டும்).

நீங்க டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா? படிங்க !

செய்முறை: 

பாசுமதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயம், புதினா, மல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 

பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில், நெய்யைக் காய வைத்து, பிரிஞ்சி இலை சேர்த்து, 

அரைத்த பட்டை - லவங்க விழுது மற்றும் இஞ்சி - பூண்டு விழுதுகளை சேர்த்துக் கிளறுங்கள். 

வதங்கியதும் வெங்காயம், சிட்டிகை உப்பு, புதினா, மல்லித்தழை சேர்த்து வதக்குங்கள். பிறகு, வடித்த சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். 

எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் !

இந்த ‘நெய் புலவு’ க்கு தொட்டுக் கொள்ள தயிர் பச்சடியை விட, குருமா மிகவும் நன்றாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)