குளிர்ச்சி தரும் அவல் மோர்க்கூழ் செய்வது எப்படி?





குளிர்ச்சி தரும் அவல் மோர்க்கூழ் செய்வது எப்படி?

0

ஊறவைத்த நெல்லை பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது அவல் ஆகும். முன்பு கைகுத்தல் முறையில் அவல் தயாரிக்கப்பட்டன. 

குளிர்ச்சி தரும் அவல் மோர்க்கூழ்

தற்போது மிஷின்கள் மூலம் தட்டையான அவல் கிடைக்கின்றது. இந்த முறையில் தயார் செய்வதால் அதில் உள்ள முழுசத்தும் நமக்கு கிடைக்கிறது.

அரிசியின் வகைகளுக்கு தகுந்தார் போல அவலும் மாறுபடும். உதாரணமாக சிகப்பு அரிசியில் இருந்து சிகப்பு அவல், வெள்ளை அரிசியில் இருந்து வெள்ளை அவல் தயாரிக்கின்றார்கள். 

கால் நரம்பு முடிச்சு என்றால் என்ன?

தற்போது பாரம்பரிய அரிசி வகைகளில் இருந்து அவல் தயாரிக்கின்றனர். வரகு, சாமை போன்ற சிறு தானியங்களில் இருந்தும் அவல் தயார் செய்கின்றனர். 

குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும் போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். 

வெறும் அவலை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். காலை சிற்றுண்டியாக சாப்பிடுவது நல்லது. சமையல் செய்வது போல வேக வைத்து தாளித்து சாப்பிடுகின்றனர். பாலில் கலந்தும் சாப்பிடுகின்றனர். 

வெறும் அவலுடன் வெல்லம் கலந்து சாப்பிடலாம் அதுவும் நல்ல சுவையாக இருக்கும். வெள்ளை மற்றும் சிவப்பு அவலைத் தான் நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். 

எளிதில் செரிமானமாகும். உடனடி எனர்ஜி தரும். சமைப்பதற்கு எளிதானது. உடல் சூட்டைத் தணிக்கும். செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும்.

தேவையான பொருட்கள்:

அவல் - ஒரு கப்

சின்ன வெங்காயம் (தோலுரித்து, பொடியாக நறுக்கியது) - கால் கப்

நறுக்கிய கொத்த மல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 (கீறவும்)

கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு - அரை டீஸ்பூன்

உடைத்த உளுந்து - ஒரு டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்

இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

புளித்த தயிர் - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். தயிரில் தண்ணீர், உப்பு சேர்த்துக் கடைந்து கொள்ளவும்.

(மோராக இரண்டரை கப் வரை இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்து தாளித்து கடலைப் பருப்பு, சின்ன வெங்காயம், 

பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.

கடைந்த மோரை அதில் ஊற்றி கலக்கி, அவல் மாவை போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்த் துருவல் தூவி, நன்கு வெந்ததும் கொத்த மல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)