கோதுமையை சுத்தம் செய்து அதிலிருந்து தான் ரவை, கோதுமை மாவு, மைதா மாவு மூன்றையும் தயாரிக்கிறார்கள். இதில் கோதுமை மாவில் நார்ச்சத்து உள்ளது மைதா என்பது நார்ச்சத்து இல்லாத மென்மையான பொருள்.
கொஞ்சமாக சாப்பிட்டாலும் வயிறுக்கு நிறைவான உணவை தரக்கூடியது. உண்மையில் உப்புமா சாப்பிட்டால் நாள் முழுக்க கிடைக்கும் சக்தி கிடைத்து விடும்.
அதோடு இந்த உப்புமா தயாரிக்கும் போது ரவை மட்டும் இல்லாமல் உடன் காய்கறிகளையும் சேர்த்து தயாரிப்பது கூடுதல் சக்தியை தரும். உடல் எடை குறைப்பில் கோதுமை ரவை உதவுகிறது.
இது குறைவான அளவே கலோரிகள் உள்ளது. அதோடு இதை சாப்பிட்ட சில மணி நேரம் வரை வயிற்றை நிரப்பி வைத்திருக்கிறது.
இதனால் அதிகப் படியான உணவு எடுத்து கொள்வது தடுக்கப் படுகிறது. குறுகிய காலத்தில் உடல் எடையை குறைக்கவும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் இவை உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 1 கப்
அரிசிக் குருணை – 1/2 கப்
தண்ணீர் – 6 கப்.
உப்பு – 1/2 டீஸ்பூன்.
குருணையைக் கழுவித் தண்ணீர் ஊற்றி வேக விடவும். நன்கு வெந்ததும் கோதுமை மாவைத் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
நர மாமிசம் உண்ட மனிதர்கள்
உருண்டு வெந்து வரும்போது கிளறி உப்பு சேர்த்து இறக்கவும். முருங்கைக் கீரைக் குழம்புடன் பரிமாறவும்.