குழந்தைகளுக்கு பிடித்த முட்டை ஆம்லெட் குழம்பு செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு பிடித்த முட்டை ஆம்லெட் குழம்பு செய்வது எப்படி?

0

முட்டை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு சத்தான உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது. 

குழந்தைகளுக்கு பிடித்த முட்டை ஆம்லெட் குழம்பு
அவை உயர்தர புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாக இருக்கிறது. 

கூடுதலாக, முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆண்டி -ஆக்ஸிடண்டுகள் உள்ளன. ஒரு முட்டையைச் சரியாக வேகவைக்க குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். 

இதற்கு மேல், முட்டையை அதிக நேரம் வேக வைக்கக் கூடாது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முட்டையை வேக வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். 

முட்டையைப் பொரியல், ஆம்லெட், அல்லது அரைவேக்காடான நிலையில் சாப்பிடக் கூடாது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகளை சாப்பிடக்கூடாது. 
ஏனெனில் முட்டை சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை அதிகரிக்கிறது. எனவே சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகள் முட்டைகளை சாப்பிடக் கூடாது. 

ஏற்கனவே அதிக எடை கொண்டவர்கள் முட்டையை சாப்பிடக் கூடாது. சாதத்திற்கு ஏற்றவாறு முட்டையைக் கொண்டு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய விரும்பினால் முட்டை ஆம்லெட் குழம்பு செய்யுங்கள். 

இது சாதத்திற்கு அட்டகாசமாக இருப்பதோடு, செய்வதற்கும் மிகவும் எளிதாக இருக்கும். அதோடு இந்த குழம்பை நீங்கள் சப்பாத்தி, தோசையுடனும் சாப்பிடலாம். 

சரி இனி முட்டை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பிடித்த முட்டை ஆம்லெட் குழம்பு செய்வது எப்படி?  என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

மிளகுத் தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

குழம்பிற்கு...

வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

மல்லித் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - தேவையான அளவு

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பட்டை - ஒரு துண்டு

ஏலக்காய் - 3

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி ஒரு நிமிடம் கழித்து, அப்படியே ரோல் போன்று சுருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதை சிறு துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு ஜாரில் வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரை தூவி, பச்சை வாசனை போக வேக வைக்கவும்.

பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, எண்ணெய் பிரிய கொதிக்க வைக்கவும். 

கருணைக்கிழங்கு கட்லெட் செய்வது

இறுதியில் அதில் ஆம்லெட் துண்டுகளைப் போட்டு கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முட்டை ஆட்லெட் குழம்பு தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)