சுவையான பூரி ஸ்வீட் ரோல்ஸ் செய்வது எப்படி?





சுவையான பூரி ஸ்வீட் ரோல்ஸ் செய்வது எப்படி?

0

புஸு புஸு பூரின்னா யாருக்கு தான் பிடிக்காது. பூரியை நன்றாக சாப்பிடத் தெரிந்த பலருக்கும் அதை எப்படி உப்பலாக செய்வது என்று தெரிவதில்லை. 

பூரி ஸ்வீட் ரோல்ஸ்

எப்படித்தான் பார்த்து பார்த்து மாவு பிசைந்தாலும், பலருக்கும் பந்து போன்று உப்பலாக பூரி வருவதில்லை. அப்படியே உப்பலாக வந்தாலும் கூட, சில நொடிகளில் வடிந்து விடுகிறது.

சிலருக்கோ பூரி அதிகளவில் எண்ணெய் இருக்கிறது என்ற ஆதங்கம். இதனால், வெளியே எங்காவது செல்லும் போது, ஹோட்டல்களில் உப்பலான பூரியே பலரின் சாய்ஸாக உள்ளது. 

தேவையானவை:

பொரித்த பூரிகள் – 6, 

தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், 

பொடித்த சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன், 

ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, 

நெய் – ஒரு டீஸ்பூன், 

லவங்கம் – 6, 

டூட்டி ஃப்ரூட்டி – 2 டீஸ்பூன்.

செய்முறை: 

சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவலை ஒன்றாக சேர்க்கவும். நெய்யை உருக்கி இதனுடன் சேர்த்துக் குழைக்கவும். 

இந்தக் கலவையை பூரிகளில் தடவி சுருட்டி, பிரிந்து விடாமல் இருக்க லவங்கத்தால் குத்தி வைக்கவும். மேலே டூட்டி ஃப்ரூட்டி தூவிப் பரிமாறவும்.

குறிப்பு :

இந்த சப்பாத்திகள் மெல்ல முடியாமல் போவது மட்டுமல்லாமல், அவற்றை வேக வைப்பதும் மிகவும் கடினமாகி விடும். உருண்டையான மற்றும் பஞ்சு போன்ற சப்பாத்திகளை செய்வதற்கு பயிற்சியும், சில தந்திரங்களும் போதும். 

இருப்பினும், மாவை பிசைவது ரொட்டி தயாரிப்பில் ஒரு முக்கிய பகுதியாகும். சிலர் மாவில் தண்ணீர் சேர்த்துப் பிசைவார்கள். நீங்கள் மாவை மென்மையாக்க விரும்பினால், முதலில் மாவை நன்றாக சலிக்க வேண்டும். 

அதன் பிறகு, அதில் 1/2 கப் வெதுவெதுப்பான நீரை சேர்த்து, மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.  அதன் பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக பிசையவும். 

மாவை நன்கு பிசைந்த பிறகு, 5 நிமிடங்கள் மூடி வைக்கவும், இது பசையம் விரிவடைவதற்கு நேரம் கொடுக்கும், இதனால் சப்பாத்தி மிருதுவாக மாறும். மாவை அவசரமாக பிசையும் போது அந்த சப்பாத்தி நன்றாக வராது. 

நீங்கள் எப்போதாவது அவசரமாக மாவை பிசைகிறீர்கள் என்றால், இந்த தந்திரம் பயனுள்ளதாக இருக்கும். ஒரு மெல்லிய மஸ்லின் துணியை ஊற வைத்து, நன்கு பிழியவும். 

துணியில் தண்ணீர் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஆனால் அது ஈரமாக இருக்க வேண்டும். இந்த துணியால் மாவை மூடி, சுமார் 10 நிமிடங்கள் ஓரமாக வைக்கவும். 

பின் 1 நிமிடம் மாவை பிசைந்து ரொட்டியைத் சுடவும். மாவை பஞ்சு போன்றதாக மாற்ற முட்டையைப் பயன்படுத்தலாம். இதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை தனி கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். 

அதில் 2 துளி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அடிக்கவும். வெள்ளைக்கரு மிகவும் பஞ்சு போன்றதாக இருக்க வேண்டும். இதை 1 டேபிள் ஸ்பூன் மாவில் கலந்து தண்ணீரில் பிசைந்து மென்மையான மற்றும் பஞ்சு போன்ற ரொட்டி தயாரிக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)