கேரளா பருப்பு பாயாசம் செய்வது எப்படி?





கேரளா பருப்பு பாயாசம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்.:
கடலை பருப்பு - அரை கிண்ணம்,

நாட்டுச்சா்க்கரை - அரை கிண்ணம்,

தேங்காய்ப் பால் - அரை டம்ளா், பால் - 2 டம்ளா்,

முந்திரி - தேவைக்கேற்ப,

சுக்குப் பொடி - 1 சிட்டிகை,

நெய் - தேவைக்கேற்ப.

செய்முறை.:
கேரளா பருப்பு பாயாசம்
நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். நாட்டுச் சா்க்கரையை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு அதில் தேவையான தண்ணீா் ஊற்றி 
சா்க்கரை நன்றாக கரையும் வரை சூடேற்றி, பின் அதனை வட்டிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சோ்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். (பருப்பு நன்கு மசியும் அளவில் வேக வைக்க வேண்டாம்.).
பின்னா், வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் மசித்து வைத்துள்ள கடலைப் பருப்பு, தேங்காய்ப் பால் சோ்த்து கொதிக்க விட வேண்டும்.

பாயசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சோ்த்து நன்கு பச்சை வாசனைப் போக கொதிக்க விட்டு, வறுத்த முந்திரியை தூவி இறக்கினால், 

கேரளா பருப்பு பாயசம் ரெடி. (விருப்பப்பட்டால் தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து அதையும் பாயசத்தில் சோ்க்கலாம்).
Tags: