மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?





மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

எலும்புகளை பலப்படுத்தி, சரும நோய்களை தீர்த்து, இரத்த சோகையை விரட்டும் தேங்காய் பால். உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். 

மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி
ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. 

குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், உலகத்தில் உள்ள பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால்,  உடலானது ஹீமோ குளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும். 

இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல், இரத்த சோகையை  உண்டாக்கும். ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்து விடுகிறது.

எப்போதெல்லாம் தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய் பாலை பருகினால் நல்ல பலன் கிடைக்கும். 

ஏனெனில் இதில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர் களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது.

தேவையான பொருட்கள் :
சிக்கன் – அரைக்கிலோ

சின்னவெங்காயம் – 150 கிராம்

தக்காளி – 2

மிளகுதூள் – 4 டீஸ்பூன்

சீரகத்தூள் – 2 டீஸ்பூன்

வரமிளகாய் – 4

இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தயிர் – 3 டீஸ்பூன்

தேங்காய்பால் – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கொத்த மல்லித்தழை சிறிதளவு

எண்ணெய் – 3 டீஸ்பூன்
செய்முறை :
சிக்கனை பொடியாக நறுக்கி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கழுவிய பின்னர் அத்துடன் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். 

வெங்காயம் சற்று வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வேக விடவும். அடுத்து அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.

இதோடு வரமிளகாயை கிள்ளிப் போடவும். சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
சிக்கன் ஊற வைத்ததால் வேகமாக வெந்து விடும். சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன் அத்துடன் தேங்காய்பால் சேர்க்கவும். ஸ்டவ்வை மிதமாக எரிய விடவும்.

சிக்கன் கிரேவி பதத்திற்கு வந்த உடன் கொத்த மல்லித் தழை தூவி இறக்கவும். மிளகு தேங்காய்பால் கிரேவி தயார்.
சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது. காரம் குறைவாக இருப்பதால் குழந்தைகளும் நன்றாக சாப்பிடுவார்கள்.
Tags: