பெங்காலி முட்டை தட்கா தால் செய்வது எப்படி?





பெங்காலி முட்டை தட்கா தால் செய்வது எப்படி?

முட்டை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு சத்தான உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது. அவை உயர்தர புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாக இருக்கிறது. 
பெங்காலி முட்டை தட்கா தால்
கூடுதலாக, முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆண்டி- ஆக்ஸிடண்டுகள் உள்ளன. ஒரு முட்டையைச் சரியாக வேக வைக்க குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். 

இதற்கு மேல், முட்டையை அதிக நேரம் வேக வைக்கக் கூடாது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முட்டையை வேக வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். 

முட்டையைப் பொரியல், ஆம்லெட், அல்லது அரைவேக்காடான நிலையில் சாப்பிடக் கூடாது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகளை சாப்பிடக்கூடாது. 

ஏனெனில் முட்டை சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை அதிகரிக்கிறது. எனவே சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகள் முட்டைகளை சாப்பிடக் கூடாது. ஏற்கனவே அதிக எடை கொண்டவர்கள் முட்டையை சாப்பிடக்கூடாது. 

சரி இனி முட்டை பயன்படுத்தி டேஸ்டியான பெங்காலி முட்டை தட்கா தால் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 1/2 கப்

உளுத்தம் பருப்பு – 1/2 கப்

கடலைப் பருப்பு – 1/2 கப் (நீரில் ஊற வைத்தது)

வெங்காயம் – 2

இஞ்சி – 1

இன்ச் பூண்டு – 6-8 பற்கள்
தக்காளி – 1

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

வர மிளகாய் – 2

பிரியாணி இலை – 2

பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

மல்லி தூள் – 1 டீஸ்பூன்

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

கடுகு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

சர்க்கரை – 1/2 டீஸ்பூன்

முட்டை – 2

உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை நன்கு கழுவி, அதில் மூன்று பருப்புக்களையும் நன்கு நீரில் அலசி போட்டு, தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி, லேசாக கடைந்து கொள்ள வேண்டும். 
அதே சமயம் 1 வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் இஞ்சி, பூண்டு மற்றும் மற்றொரு வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தமும், பிரியாணி இலை, வர மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும். 

பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். அடுத்து வெங்காய பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். 

பிறகு தக்காளி, உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும். 
பின் அதில் வேக வைத்துள்ள பருப்புக்களை சேர்த்து கிளறி, சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். 
அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் அதில் முட்டையை உடைத்து உப்பு சேர்த்து, நன்கு கிளறி இறக்கி விட வேண்டும். 

இறுதியில் அந்த முட்டையை பருப்பில் சேர்த்து கிளறி இறக்கினால், முட்டை தட்கா தால் ரெடி!!!
Tags: