தேவையானவை :
உருளை - 1/4 கிலோ
வெங்காயம் - 2 சிறியதாக நறுக்கியது
கத்திரிக்காய் - 1/4 கிலோ
இஞ்சி- பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 2
தனியா பொடி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி - தலா 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேஜைக் கரண்டி
கொத்தமல்லி - 1/2 கப் நறுக்கியது
செய்முறை :
முதலில் உருளை, கத்திரி மற்றும் தக்காளியை சதுரங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெயை ஊற்றி, வெங்காயத்தை 1 நிமிடத்திற்கு வதக்க வேண்டும்.
பின் அதனுடன் இஞ்சி-பூண்டு, சீரகதூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து 2 நிமிடத்திற்கு வதக்கவும்.
பின்னர் உருளை, கத்திரி சேர்த்து 13-15 நிமிடம் வரை கிளறவும். தக்காளி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின்னர் மல்லி தூவி, பூரி, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பறிமாறவும்.