தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
முழு உளுந்து - 1/4 கப்
பூண்டு பற்கள் - 10 முதல் 15 வரை
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிப் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த் துருவல் - 2 முதல் 3 டேபிள் ஸ்பூன் வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ற வாறு
செய்முறை:
வெறும் வாணலியில் அரிசியையும், உளுந்தையும், நிறம் மாறாமல், தொட்டால் சுடும் அளவிற்கு வறுத்தெடுக்க வும்.
ஒரு குக்கரில், வறுத்த அரிசி, உளுந்து, பூண்டு, வெந்தயம், உப்பு ஆகிய வற்றைப் போட்டு,
அத்துடன் இரண்டரைக் கப் தண்ணீரைச் சேர்த்து, மூடி, 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டெடுக் கவும்.
அத்துடன் இரண்டரைக் கப் தண்ணீரைச் சேர்த்து, மூடி, 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டெடுக் கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் சீரகம், பெருங்காயத் தூள், முந்திரி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
சீரகம் பொரிந்ததும், தேங்காய்த் துருவலைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள அரிசிக் கலவையைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
குறிப்பு:
புழுங்கலரிசி மற்றும் கறுப்பு உளுந்தை உபயோகித்துத் தான் இந்த சாதத்தை செய்வார்கள். இடுப்பெலும் பிற்கு வலு சேர்க்கக் கூடியது.
இதைத் தாளிக்காமல், சிறிது நல்லெண்ணை சேர்த்து அப்படியேவும் சாப்பிடலாம்.