ரத்த சோகையை தடுக்கும் கீரை பற்றி அறிவோம் !





ரத்த சோகையை தடுக்கும் கீரை பற்றி அறிவோம் !

0
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ, குறைபாட்டி னால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. 
ரத்த சோகையை தடுக்கும் கீரை
கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ’ ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப் படுகிறது.

கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்து விடாது. 

கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப் படுகிறது. அரைக் கீரை, பாலக் கீரை, தண்டுக் கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா ஆகியவை அதிக மக்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்தவை..

கீரையில் அப்படி என்ன இருக்கிறது…

கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனைப் பெறலாம்.

கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி’ போன்ற வற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.

கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்’ வைட்டமின் களையும் கொண்டுள்ளது.

* பாக்டீரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரைகள் மாசுபட வாய்ப்பிருக் கிறது. 

எனவே நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் கீரையை உபயோகிக்கக் கூடாது. இல்லா விட்டால் வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சினைகள் வரலாம்.
கீரை பற்றி அறிவோம்
* கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிக நேரம் சமைப்பதி னால் கீரையிலுள்ள முக்கிய சத்துப் பொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைத் திறனுக்கு உதவும் சத்துப் பொருளாகும்.

* கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டி விடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும் போது மூடி வைக்க வேண்டும்.

* கீரைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றிலுள்ள கரோட்டீன்கள் வீணாகி விடும்.

* கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

* கோடையில் குளிர்ச்சி தரும் கீரைகளை சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)