தேவையானவை:
துவரம் பருப்பு – அரை கப்,
முருங்கைக்காய் – 1,
கத்தரிக்காய் – 2,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 4,
தக்காளி – 3,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்,
சோம்பு – 1 சிட்டிகை,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வையுங்கள். முருங்கைக் காய், கத்தரிக் காயை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள்.
பச்சை மிளகாயை கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் வதங்கியதும், கத்தரிக்காய், முருங்கைக் காய், உப்பு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்குங்கள்.
ஒரு கப் தண்ணீரில் புளியைக் கரைத்து, வடிகட்டி காய்க் கலவையில் சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதித்த பின் பருப்பை சேர்த்து இறக்குங்கள்.
பச்சை மிளகாய் க்குப் பதில் சாம்பார் பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்தும் செய்யலாம். மணமாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும் ருசியாக இருக்கும் இந்தப் பச்சடி.