என்னென்ன தேவை?
பச்சரிசி 2 1/2 கப்,
முழு வெள்ளை உளுத்தம் பருப்பு 1/2 கப்,
தேங்காய் பால் 1/2 கப்,
உப்பு சுவைக்கேற்ப,
சீரகம் 1 டீஸ்பூன்,
வெண்ணெய் 50 கிராம்,
பெருங்காயம் 1/2 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் பொரிக்க.
எப்படிச் செய்வது?
அரிசியையும் பருப்பையும் மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். ஆறியதும், சலித்து, எல்லா பொருட்களை யும் சேர்த்து, தேங்காய் பாலை சிறிது சிறிதாக விட்டு
நன்றாக கட்டி யில்லாமல் கெட்டியாகப் பிசையவும். தேவைப் பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு, தேங்காய் எண்ணெயில் பிழியவும். இருபுறமும் திருப்பிப் போட்டு, பொன்னிற மாகப் பொரித்தெடுக் கவும்.