தேவையானவை:
புளிக்காத புது தயிர் – 1 கப்,
பிஞ்சு சோளம் – 1, பட்டாணி – கால் கப்,
பொடியாக நறுக்கிய பனீர் – கால் கப்,
பச்சை மிளகாய் – 1,
பூண்டு (விருப்பப் பட்டால்) – ஒரு பல்,
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சோளத்தை உதிர்த்துக் கொள்ளுங்கள். சோள மணி களையும் பட்டாணியை யும் வேக வையுங்கள். பச்சை மிளகாய், பூண்டை நசுக்கிக் கொள்ளுங்கள்.
வேக வைத்த சோளம், பட்டாணிக் கலவையுடன் பச்சை மிளகாய், பூண்டு, பனீர் துருவல், மிளகுத் தூள், உப்பு சேர்த்து தயிரையும் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.
குழந்தைகளு க்குக் கொடுக்க ஏற்ற சத்தான தயிர்பச்சடி இது.