என்னென்ன தேவை?
சுருள் (அ)சங்கு மக்ரோனி – அரை கப்,
பச்சைப் பட்டாணி – கால் கப்,
மிளகுத் தூள் – ருசிக்கேற்ப,
உப்பு – சுவைக்கேற்ப.
சூப் செய்ய:
வெள்ளைப் பூசணி – கால் கிலோ,
உருளைக்கிழங்கு – 1,
பெரிய வெங்காயம் – 1,
பால் – அரை கப்,
உப்பு – சுவைக்கேற்ப,
வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.
மக்ரோனியை தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். பட்டாணியை யும் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு, பூசணிக்காயை தோல் நீக்கி, துண்டுகளா க்குங்கள். வெங்காய த்தையும் தோல் நீக்கி நறுக்குங்கள்.
வெண்ணெயை உருக்கி, பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள். அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 2 அல்லது 3 விசில் வரும்வரை வையுங்கள்.
இது நன்கு வெந்ததும் ஆறவிட்டு வடிகட்டி அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்ததை மீண்டும் முதலில் வேக வைத்த தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.
அத்துடன் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். இறக்கிய சூப்பில், பட்டாணி, மக்ரோனி கலந்து, மிளகுத் தூள் தூவிப் பரிமாறுங்கள்.