தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?





தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

0
தேங்காய் மற்றும் தேங்காய்ப் பாலில் ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. பலரும் தேங்காய் பால் அருந்துவதால் உடல் எடை கூடும் என்றும் நினைக்கின்றனர். 
தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?
அது தவறு, விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பாலை விட தேங்காய் பாலில் கொழுப்பு சத்து குறைவு. ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். 
சமையலில் தேங்காய் வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. நாம் உண்ணும் உணவுகளில் உள்ள புரதங்களை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன. 

தேங்காய் பால் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது.  

தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது. சரி இனி தேங்காய் பால் கொண்டு தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான அளவு :

சிக்கன் - 1 கிலோ, 

தேங்காய் பால் அரிசியின் அளவுக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளவும்.

சீரக சம்பா அரிசி - 1 கிலோ, 

வெங்காயம் - 2, 

இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,

கிராம்பு - 1 டேபிள் ஸ்பூன்,

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்,  

பட்டை - 1 டேபிள் ஸ்பூன்,

முந்திரி - 4, , 

எலுமிச்சம் பழம் - 1, 

பச்சை மிளகாய் - 2, 

தயிர் - 1/2 கப், 

நெய் - 1 டேபிள் ஸ்பூன், 

புதினா - தேவையான அளவு,   

கொத்தமல்லி - தேவையான அளவு,

எண்ணெய் - தேவையான அளவு, 

உப்பு - தேவையான அளவு, 
செய்முறை :
தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது
பிரியாணி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் பட்டை, கிராம்பு சேர்த்து, அரிசியை உதிரியாக வேக வைத்து வடித்து வைக்கவும். 

மீதம் இருக்கும் பட்டை, கிராம்பை இஞ்சி, பூண்டுடன் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரியை தனியாக அரைக்கவும். அதன் பிறகு கொத்தமல்லி இலை, புதினா, சேர்த்து தனியாக அரைக்கவும். 

குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். 

அடுத்து அதில் அரைத்த வெங்காய மசாலாவை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பச்சை வாசனை போனவுடன் அரைத்த கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
சிக்கன் வெந்து, மசாலா சுருண்டு வந்ததும், வடித்து வைத்துள்ள சாதம் சேர்த்து கிளறி, அரை மணி நேரம் மிதமான தீயில் வைத்து இறக்கினால் சுவையான தேங்காய் பால் சிக்கன் பிரியாணி தயார். 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)