தேவையானவை
நெல்லிக் காய் – 5
நல்லெண்ணெய் – 2 மேசைக் கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை :
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தை யும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நெல்லிக் காயை விதையை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதை வடிகட்டி யில் போட்டு வடிகட்டி சாறு எடுக்கவும்.
வடிகட்டி வைத்திரு க்கும் சாறுடன் மஞ்சள் தூள், உப்பு கலந்து வைக்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு வறுத்து அதில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் துண்டுகளை போடவும்.
பின்னர் அதில் நெல்லிக் காய் சாறை ஊற்றி லேசாக நுரை வந்ததும் இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஆற வைத்து உதிர்த்த சாதத்தை போட்டு நெல்லிகாய் சாறை ஊற்றி கிளறவும்.
நெல்லிக்காய் சாதம் ரெடி.