தேவையானவை:
பனீர் – 150 கிராம்,
பால் – ஒரு லிட்டர்,
சர்க்கரை – 150 கிராம்,
முந்திரி, பாதாம் – தலா 6,
பிஸ்தா – 2 டீஸ்பூன்,
பேரீச்சம் பழம் – 6,
ஏலக்காய்த் தூள் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
பாதாம், முந்திரி, பிஸ்தா, பேரீச்சம்பழம் ஆகிய வற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பனீரை சிறு சிறு துண்டு களாகவோ அல்லது துருவியோ வைக்கவும்.
பாலைக் காய்ச்சி, பாதியாக குறுக்கவும். சர்க்கரை, பேரீச்சம்பழம் சேர்க்கவும்.
கொதி வந்தபின் பனீர் துண்டுகள் அல்லது துருவல், பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கிளறி இறக்கினால்… பனீர் கீர் ரெடி!
இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறலாம்.