நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணி களை ருசியால் கட்டிப் போடும் சைடு டிஷ்களில் குருமாவும் ஒன்று.
இந்த வாரம் நாம் நீலகிரி பாணியில் மட்டன் குருமா செய்யக் கற்றுக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மட்டன் – 200 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம் (நறுக்கியது)
பட்டை – 2 கிராம்
லவங்கம் – 2 கிராம்,
ஏலக்காய் – 2 கிராம்
பச்சை மிளகாய் – 10 கிராம்
சோம்பு – 5 கிராம்
பூண்டு – 25 கிராம்,
இஞ்சி – 25 கிராம்
மிளகாய்த் தூள் – 10 கிராம்
தனியா – 15 கிராம்
தேங்காய் – 1/2 மூடி
கொத்த மல்லி – ஒரு கட்டு
எண்ணெய் – 50 மில்லி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
* இஞ்சி, பூண்டு, வெங்காய த்தை விழுதாக்க வும்.
தேங்காய், பச்சை மிளகாய், கொத்த மல்லி இவற்றை தனியே அரைக்கவும்,
* மட்டனை சுத்தம் செய்து நறுக்கி, தயிரில் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு போட்டுத் தாளிக்கவும்.
* வெங்காய விழுதை வதக்கவும். தக்காளியை வதக்கி ஏனைய மசாலா பொருட் களை சேர்க்கவும். நன்கு `பிரை` செய்யவும்.
* மட்டனை சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காய் கலவை விழுதைச் சேர்க்கவும். போதுமான உப்பு சேர்த்து குறைந்த தீயில் வேக வைக்கவும்.
* மட்டனை இறக்குவதற்கு முன் மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, கறி மசாலா தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கிளறவும்.
* நறுக்கிய கொத்த மல்லி இலையைத் தூவி அலங்கரிக்கவும். சாதம், தோசை க்குத் தொட்டுக் கொள்ள இந்த குருமா சுவையாக இருக்கும்.
இதே முறைப்படி மட்டனு க்குப் பதிலாக சிக்கன், மீன், நண்டு இவற்றை பயன் படுத்தியும் குருமா செய்யலாம்.