தேவையானவை
உருளைக் கிழங்கு – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
கடலை மாவு – 1/2 கப்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
கறி மசாலா – 1/4 டீஸ்பூன்
லெட்டூஸ் இலை – 15
குழம்பிற்கு தேவை யானவை
புளி – சிறு உருண்டை
தேங்காய் துருவல் – 1/2 கப்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்
பட்டை கிராம்பு – சிறிதளவு
உப்பு எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
* உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு கட்டி இல்லாமல் மசிக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்,
கடலை மாவு, மிளகாய்த் தூள், கறிமசாலா, உப்பு சேர்த்து தேவை யானால் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும்.
* லெட்டூஸ் கீரையை நடுவில் உள்ள காம்பை நீக்கி 2 துண்டு களாக்கவும் இந்த பாதி லெட்டூஸ் இலை மேல் மாவுக் கலவையை வைத்து ரோலாக சுருட்டி வைக்கவும்.
* இப்படி மாவு அனைத்தை யும் லெட்டூசில் ரோல் செய்து இட்லி தட்டில் வைத்து இட்லி அவிப்பது போல அவித்து எடுக்கவும்.
* புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். தேங்காய், வெங்காயம், சோம்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
* தக்காளி சேர்த்து வதக்கவும், அரைத்த தேங்காய் மசாலாவை இத்துடன் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர், உப்பு, மிளகாய்த் தூள்,
மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, 1 கப் தண்ணீர் விட்டு பொடி வாசனை போக கொதிக்க விடவும்.
* குழம்பு நன்றாக கொதி த்ததும் வேக வைத்த லெட்டூஸ் கீரை ரோலைப் போட்டு மூடி வைத்து 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.