அருமையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்வது எப்படி?





அருமையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்வது எப்படி?

சிக்கனில் அதிகப்படியான புரதம் நிறைந்துள்ளது. இதனால் எலும்புகளை பாதிக்கக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. 
கிரிஸ்பி மிளகாய் சிக்கன்
மேலும் இது எலும்புகளை ஆரோக்கியம் பெறச் செய்கிறது.  உடலில் ரத்தச் சோகை ஏற்படுவதும் மற்றும் இரும்புச் சத்து குறைவாக காணப்படுவது போன்றவை உடலுக்கு அவ்வப்போது சோர்வை அளிக்கும். 

இந்த பிரச்னை தீர்ந்திட, கோழிக்கறி உட்கொண்டு வருவது நன்மையை தரும். உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும். மேலும் ரத்த சோகை பிரச்னை நீங்கும். 

இதன் மூலம் நிம்மதியான உறக்கம் ஏற்பட்டு, உடல் சுறுசுறுப்புடன் இருக்க உதவி செய்யும். நம் உடலுக்கு தேவையான முக்கியமான ஹார்மோன்களில் ஒன்று செரோடோன். 
இது உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கக் கூடியதாக உள்ளது. பலரும் கோழிக்கறி சாப்பிட்டால் தூக்க வரும், உடலில் சோர்வு அதிகரிக்கும் என்று கூறுவார்கள். 

உண்மையில் கோழிக்கறியுடன் நீங்கள் எதை சேர்த்து சாப்பிடுகிறீர்கள் என்பதால் இது போன்ற மனநிலை ஏற்படுகிறது. 

உரிய முறையில் கோழிக் கறியை சமைத்து சாப்பிடுவதால் செரோடோன் ஹார்மோன் செயல்பட தேவையான டிரிப்டோபான் உற்பத்தி அதிகமாகி, உடலில் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

நம்மில் பல பேருக்கு அசைவம் இல்லாமல் உணவே இறங்காது. அதிலும் சிக்கன் என்றால் சிலர் உயிரையே விடுவார்கள். ஆனால் தினமும் ஒரே மாதிரியான அசைவ உணவு என்பது அலுத்து விடும்.

அதனால் கொஞ்சம் வெரைட்டி யான சிக்கன் உணவு சாப்பிட விரும்பு வர்கள் இந்த கிரிஸ்பி மிளகாய் சிக்கன் கண்டிப்பாக சுவைத்து ஆகவே வேண்டும். நாக்கு ஊறும் கிரிஸ்பி மிளகாய் சிக்கன் எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்.!

சிக்கன் - 1 கிலோ,

மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி,

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,

மிளகு தூள் - 1 தேக்கரண்டி,

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி,

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,

பச்சை மிளகாய் – 2,

காய்ந்த மிளகாய் – 4,

எலுமிச்சை - அரை மூடி,

கலர்பொடி - 1/4 தேக்கரண்டி (விரும்பி னால்),

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,

கருவேப்பிலை - 2

ஆர்க்கு, உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை;
காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக இடித்து கொள்ளவும்.

சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.

2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும். வாணலியில் தேவை க்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங் களை போட்டு பொரித் தெடுக்கவும்.
ஸ்கூல் கிளாஸ் ரூமில் டீச்சரும், வாத்தியாரும் !
சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும். இப்போ கிரிஸ்பி மிளகாய் சிக்கனை நீங்கள் சூடான சாதத்துடன் வைத்து சாப்பிட சுவையில் உங்களையே மறந்து விடுவீர்கள்.

சாதம் மட்டு மில்லாமல், அனைத்து டிஃபன் வகைகளு க்கும் இந்த கிரிஸ்பி மிளகாய் சிக்கன் பர்ஃபெக்ட் சைட்டிஷ் ஆக இருக்கும்
Tags: