தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
வெள்ளை எள் - 4 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 4 அல்லது 5 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
சாதத்தைக் குழைய விடாமல், பொல பொல என்று வேக வைத்து எடுத்து, ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
வெறும் வாணலி யில் எள்ளைப் போட்டு சற்று சிவக்க வறுத் தெடுக்கவும்.
பின் அதே வாணலி யில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப் பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகிய வற்றை சிவக்க வறுத் தெடுத்து ஆற விடவும்.
பின்னர் இத்துடன் வறுத்த எள், உப்பு சேர்த்து மிக்ஸி யில் போட்டு நன்றாக பொடி செய்யவும்.
இந்தப் பொடியை சாதத்தின் மேல் தூவி, சிறிது நல்லெண்ணைச் சேர்த்து கிள்றி விடவும்.
குறிப்பு:
எள் பொடியை முன்பே செய்து வைத்துக் கொண்டால், தேவை படும் பொழுது சாதத்தில் சேர்த்து கிளறிக் கொள்ள லாம்.