தேவையானவை:
சேப்பங்கிழங்கு - 3
மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டிதழ் - 2
பெருங்காயம் - சிறிது
மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டிதழ் - 2
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - இரண்டல்லது மூன்று டீஸ்பூன்
எண்ணெய் - இரண்டல்லது மூன்று டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கிழங்கு களைப் போட்டு அவை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, வேக வைத்தெடுத்து,
ஆறியதும் தோலை உரித்து விட்டு படத்தி லுள்ளது போல் நறுக்கி வைக்கவும்.
ஒரு கிண்ண த்தில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
இப்போது நறுக்கி வைத்துள்ள துண்டுகளை ஒவ்வொன் றாக எடுத்து மிளகாய்த் தூள் கலவையில் எல்லா பக்கமும் புரட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
இது மாதிரியே எல்லா வற்றையும் செய்து ஒரு 1/2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.அல்லது வெளியில்கூட வைக்கலாம்.
ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் பாதி எண்ணெய் விட்டு கல் கொண்ட மட்டும் கிழங்கு துண்டு களை தனித்தனி யாக வைத்து,
இவற்றுடன் பூண்டிதழ் களை லேசாகத் தட்டிப் போட்டு மிதமானத் தீயில் மூடி போட்டு வேக விடவும்.
தயிரைக் கட்டி யில்லாமல் கலக்கிக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து துண்டு களைத் திருப்பி விட்டு,
மீதமுள்ள எண்ணெயை சுற்றிலும் விட்டு, ஒவ்வொரு துண்டின் மீதும் சிறிது தயிரை ஸ்பூனால் தடவி விடவும்.
மீண்டும் துண்டு களைத் திருப்பி விட்டு முன்பு சொன்னது போலவே தயிரைத் தடவி விட்டு கிழங்கின் இரண்டு பக்கமும் நன்றாக சிவக்கும் வரை அடிக்கடி திருப்பி விட்டு எடுத்து வைக்கவும்.
இப்போது சுவையான சேப்பங் கிழங்கு வறுவல் தயார். இது எல்லா சாதத்தி ற்கும் நன்றாகப் பொருந்தும்.