சுவையான கேழ்வரகு புட்டு செய்வது எப்படி?





சுவையான கேழ்வரகு புட்டு செய்வது எப்படி?

அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி உண்ண வேண்டும் எனும் தேவையை குறைத்து உடற்பருமன் குறைய கேழ்வரகு உதவுகிறது. 

சுவையான கேழ்வரகு புட்டு செய்வது எப்படி?
மேலும், உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும். எந்த தானியத்தை விடவும் ராகியில் தான் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. 

இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) தீவிரம் குறைய, இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கிறது. 

புதுத் தாயின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்யும் ஓர் உணவு. 

பச்சை வேர்க்கடலையில் அதிக அளவில் மாங்கனீசு, பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்திருப்பதால் இது எலும்புகளை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. 

குழந்தைகளுக்கு குக்கீஸ், பிஸ்கட் என ஸ்கூலுக்கு ஸ்நாக்ஸ் கொடுப்பதை விட, ஊறவைத்த பச்சை வேர்க்கடலையை முளைகட்டியோ அல்லது பாதியளவு வேகவைத்தோ கொடுத்து அனுப்பலாம்.

இது அவர்களுடைய கவனத் திறனை மேம்படுத்துவதோடு ஞாபகத் திறனையும் அதிகரிக்கச் செய்யும். உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.

தேவையானப் பொருள்கள் . :

கேழ்வரகு மாவு - ஒரு கப்

வேர்க்கடலை - 1/2 கப்

எள் - ஒரு டீஸ்பூன்

வெல்லம் - 1/2 கப்பிற்கும் குறை வாக‌

உப்பு - துளி

செய்முறை . :
சுவையான கேழ்வரகு புட்டு செய்வது எப்படி?
முதலில் வேர்க்கடலை, எள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். 

வேர்க்கடலை ஆறிய பிறகு தோலெடுத்து விட்டு அதனுடன் எள்ளையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, அடுத்து வெல்லம் சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மைய அரைக்க வேண்டாம். 

சிறிது கொர கொரப்பாக இருக்கட்டும். அடுத்து கேழ்வரகு மாவில் துளி உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத் தான்), தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும் மாவைப் பிசறினார் போல் கிளறவும்.

தண்ணீரைக் கலக்கும் போது கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிக மாகி விட்டால் மாவு புட்டு போல் இல்லாமல் கொழ கொழப்பாகி விடும். 

தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும். ஒரு கப் மாவிற்கு 1/2 கப்பிற்கும் குறைவானத் தண்ணீர் தேவைப்படும்.

தண்ணீர் சேர்த்துப் பிசறிய பிறகு ஒரு 10 நிமி மூடி வைக்கவும். பிறகு எடுத்து கட்டிக ளில்லாமல் உதிர்த்து விடவும். அதன் பிறகு இட்லி அவிப்பது போல் இட்லிக் கொத்தில் ஈரத்துணி போட்டு மாவை அவிக்கவும். 
ஆவி வந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி வேர்க்கடலைக் கலவையைக் கலந்து விடவும். விருப்பமானால் துளி ஏலக்காய்த் தூள் சேர்க்கலாம். 

இப்போது சத்தான, சுவையான கேழ்வரகு புட்டு தயார். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
Tags: