தேவையானவை
கருவாடு - 100 கிராம்
பிஞ்சு கத்தரிக்காய் - 5 (அ) வாழைக்காய் - பாதி
மொச்சை - 3 கைப்பிடி (ஒரு நபருக்கு ஒரு பிடி)
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
பூண்டு - முழு பூண்டு (அ)பாதி
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
வடகம் - கொஞ்சம்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
மொச்சையை முதல் நாளே ஊற வைத்து விட வேண்டும். இப்போது சிறிது உப்பு போட்டு வேக வைத்து எடுக்கவும்.
புளியைத் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும். கருவாட்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிய வைக்கவும்.
பூண்டை உரித்துக் கொண்டு, வெங்காய த்தைத் தட்டி (அ) நறுக்கி வைக்கவும். தக்காளி யையும் நறுக்கி வைக்கவும்.
ஒரு மண் சட்டியில் (அ) வாணலி யில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத் துள்ளப்
பொருள் களைத் தாளித்து வெங்காயம், பூண்டு போட்டு வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதனுடன் கருவாடு சேர்த்து வதக்கவும். பிறகு மொச்சை சேர்த்து வதக்கி, பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் புளித் தண்ணீரை ஊற்றி, காரம், உப்பு சரிபார்த்து, மூடி வைத்து கொதிக்க விட வேண்டும்.
நன்றாகக் கொதி க்கும் போது கத்தரிக் காயை நறுக்கி (விரும்பிய வடிவத் தில்) குழம்பில் போட்டு கலக்கி விடவும்.
நன்றாகக் கொதித்து காய் வெந்த பிறகு குழம்பை இறக்கி மூடி வைக்கவும்.இது முதல் நாளை விட அடுத்த நாள் தான் மிகவும் நன்றாக இருக்கும்.
இதை சாதம், இட்லி, தோசை இவற்றுடன் சேர்த்து சாப்பிட லாம்.
குறிப்பு:
பிஞ்சு கத்தரிக் காயானால் காம்பை மட்டும் எடுத்து விட்டு நாலாகக் கீறி முழுதாகப் போடலாம்.
வாழைக் காயானால் வட்டமாக, சற்று பெரிய துண்டு களாகவே போடலாம்.