திப்பிலியின் மருத்துவ குணங்கள் !





திப்பிலியின் மருத்துவ குணங்கள் !

திப்பிலி இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடல் வெப்ப த்தை அதிகரிக்கச் செய்யும், குடல் வாயுவைப் போக்கும் சத்து மருந்தாகும். மூக்குப் பொடி தயாரிக் கவும் பயன் படுகின்றது.
திப்பிலியின் மருத்துவ குணங்கள் !
திப்பிலி வாத நோய்களைக் குணப்படுத்தும். வயிற்று உப்பு சத்திற்கான மருந்தாக, செரியாமை மருத்துவத்திலும் பயன்படுகின்றது. 
திப்பிலி இலைகள், பழங்கள் ஆகியவற்றின் நோய் எதிர்ப்புத் திறன் பரிசோதனைகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

திப்பிலி தரையில் சுற்றிப் படர்வதுடன், மேலே ஏறக்கூடிய மண முள்ள கொடியாகும். திப்பிலி கீழ்பகுதி இலைகள், 6-10 செ.மீ. நீளத்தில், அகன்ற நீள்வட்ட வடிவத் தில் காணப் படும். 

மேல் பகுதி இலைகள் நீள் வட்டமா கவும், இதய வடி விலும் காணப் படும். 

திப்பிலி பழங்கள், நீள்வட்ட வடிவில், சதைப் பிடிப் புள்ள காம்பு பகுதியில் மறைத்தும், 2.5-4 செ.மீ. வரை நீளமாகவும், கரும் பச்சை யாகவும், பளபளப் பாகவும் காணப் படும். 
இந்தியா வின் வெப்ப மான பகுதி களில் திப்பிலி பரவ லாக வளர் கின்றது. இதன் மருத்துவப் பயன் களுக் காகப் பெரு மளவில் பயிர் செய்யப் படுகின் றது.
உலர்ந்த திப்பிலி கனிகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடை க்கும். திப்பிலி பழைய இலக்கிய நூல் களில் மாகதி என்கிற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. 

இது, வடக்கு பீகார் (மகத நாடு) பகுதியில் காண‌ப்பட்டது என்ப தைக் குறிப்ப தாக‌ இருக்க லாம் என்று தற்போது அறியப்பட்டுள்ளது.

திப்பிலியின் உலர்ந்த பழங்கள் மருத்துவத்தில் பயன்படுகின்றன‌. தேமல் குண மாக திப்பிலித் தூள் ½ தேக் கரண்டி அளவு, தேவையான அளவு தேனுடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். 
காலை, மதியம், மாலை வேளைகளில் 1 மாதம் வரை சாப்பிடலாம். திப்பிலித் தூள் ½ தேக்கரண்டி அளவு, தேவை யான அளவு தேனுடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். 

தொடர்ந்து நீண்ட நாட்கள் உபயோ கித்து வர குரல் வளம் ஏற்படும். காய்ந்த திப்பிலியை சுத்தம் செய்து, நெய்யில் வறுத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

¼ முதல் ½ தேக் கரண்டி வரை, தினமும் காலை, மாலை வேளைகள், ½ தேக்கரண்டி தேனில் குழை த்து சாப்பிட்டு வர தொண்டைக் கட்டு, கோழை, நாக்குச் சுவை யின்மை தீரும்.
கழுத்தெலும்பு அழற்சிக்கான அறி குறிகள் !
வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் குணமாக திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு, சம எடையாக வறுத்து, தூள் செய்து வைத்துக் கொண்டு

(திரிகடுகு சூரணம்), ½ தேக் கரண்டி அளவு, தேனில் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு நாளை க்கு 3 வேளை கள், 7 நாட்கள் வரை செய்ய லாம்.
Tags: