இளமையை துடிக்க வைக்கும் தர்பூசணியின் அற்புத பலன்கள் !





இளமையை துடிக்க வைக்கும் தர்பூசணியின் அற்புத பலன்கள் !

கோடை காலம் வந்து விட்டால் தெருவுக்கொரு தர்பூசணிக் கடை முளைத்து விடும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்துக்குள் தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருப்பார்கள். 
இளமையை துடிக்க வைக்கும் தர்பூசணியின் அற்புத பலன்கள் !
கண்ணைக் கவரும் இதன் ரத்தச் சிவப்பு நிறம், நம்மை அறியாமலேயே நம்மைக் கடையை நோக்கி இழுத்து விடும். கொஞ்சம் மிளகாய்த்தூளை லேசாக மேலே தூவித் தருவார் கடைக்காரர். 
மிளகாய்த்தூள்  தூவினால் ஒரு சுவை. அப்படியே சாப்பிட்டால் இன்னொரு சுவை. இரண்டுமே அலாதியானவை. தர்பூசணி சாப்பிடுவதற்காகவே கோடை காலம் வராதா என ஏங்குபவர்களும் உண்டு. 

குறைவான விலையில் நிறைவான பலன் தருவது தர்பூசணி. நீர்ச்சத்து அதிகமாக உள்ள வெள்ளரி இனத்தைச் சேர்ந்தது. தர்பூசணியை வாட்டர் மெலான், குமட்டிப்பழம், தர்பீஸ் என வேறு பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

தர்பூசணி
இளமையை துடிக்க வைக்கும் தர்பூசணியின் அற்புத பலன்கள் !
தர்பூசணி (Watermelon) என்றதும் கோடையின் வெம்மையில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளக் கூடியது என்று வெறுமனே சொல்லி விட்டு கடந்து விட முடியாது. அதில் ஏராளமான சத்துகள் நிறைந் துள்ளன. 

குறிப்பாக, தர்பூசணியில் இரும்புச் சத்து உள்ளது. இதில் உள்ள இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்குச் சமமாகும். வைட்டமின் ஏ, சி, பி1, பி6 மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன.

எடை குறைக்க உதவும்
இளமையை துடிக்க வைக்கும் தர்பூசணியின் அற்புத பலன்கள் !
தர்பூசணி நீர்ச்சத்து நிறைந்தது என்பதால் உடல் சூட்டைக் குறைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

அதே நேரத்தில், கோடைக் காலங்களில் கிடைக்கக் கூடிய இந்தத் தர்பூசணியைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மேலும், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை உள்ளது. 
ரத்த ஓட்டத்தைச் சீராக்கி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து விடும். அத்துடன் ரத்தக் குழாயில் படியக் கூடிய கழிவுகளைச் சுத்தப் படுத்தும் பெரும் பணியைச் செய்யக் கூடியது தர்பூசணி.

மற்ற பழங்களில் இல்லாத ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்து இருப்பதால் இது உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாகச் சென்று நரம்பு களுக்குக் கூடுதல் சக்தியைத் தருகிறது.

இயற்கை வயாகரா
இளமையை துடிக்க வைக்கும் தர்பூசணியின் அற்புத பலன்கள் !
பவர் ஹவுஸ் என்று கூறப்படும் சிட்ருலின் (citrulline) என்ற அரிய வகைப் புரதச்சத்து தர்பூசணியில் அதிக அளவில் உள்ளது. இது ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

தர்பூசணியைச் சாப்பிட்டதும் அதில் உள்ள `சிட்ருலின்' வேதியியல் மாற்றம் அடைந்து அர்ஜினைன் (arginine) என்ற வேதிப் பொருளாக மாறுகிறது. அது இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்கு விக்கிறது.
மிக முக்கியமாக ஆண் உறுப்பில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகளைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. 

ஆகவே தான் இதை ஒரு இயற்கை வயாகரா என்று சொல்கிறார்கள். தர்பூசணி என்றதும் நம் நினைவில் வருவது செக்கச்செவேல் என்ற அந்தச் சிவப்புநிற சதைப்பாகம் தான்.

ஆனால், அந்தச் சிவப்பு நிற சதைப்பாகத்தை ஒட்டி இருக்கும் வெள்ளை நிற சதைப்பாகம் தான் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் வல்லமை படைத்தது என்பது கூடுதல் தகவலாகும்.

தர்பூசணியில் உள்ள லைக்கோபின் என்ற நிறமி, சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. மேலும், இதய நோய், புற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

தர்பூசணி ஜூஸ்
இளமையை துடிக்க வைக்கும் தர்பூசணியின் அற்புத பலன்கள் !
தர்பூசணிக்கு உடல் உஷ்ணத்தைக் குறைத்து மனதை அமைதிப் படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்கக் கூடியது. சிறுநீரை நன்றாகப் பிரிய வைக்கும் தர்பூசணி அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் கூடிய வயிற்று வலியையும் குணப்படுத் துகிறது.

இளமை யையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி. இதை மிக்ஸியிலிட்டு அரைத்துச் சாறு எடுத்துக் குடிக்கலாம். ஊட்டச் சத்து நிறைந்த பானம் இது.

விதை நீக்கப் பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, சிறிது நேரம் ஓட விட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து அருந்தலாம். விருப்பமானால், சிறிது நாட்டுச் சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினா தழைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தோல், கொட்டை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - ஒரு கப், சோற்றுக் கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கலந்து முகத்தில் பூசி,

இரண்டு நிமிடங்கள் நன்றாகத் தேய்த்துக் கழுவினால் முகம் மெருகேறி ஜொலி ஜொலிக்கும். மேலும் இது வயதாவதால் ஏற்படும் முகச்சுருக்கங்களைச் சீர் செய்யும்.

ஒரு கப்பில் தர்பூசணி ஜூஸை எடுத்து, அதில் பஞ்சை நனைத்து, முகத்தை ஒற்றி எடுத்து 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.
சிட்ரஸ் அழற்சி இருக்கா, இல்லையானு தெரியுமா? அதை தெரிஞ்சு கொள்ள… !
இதைத் தினமும் செய்து வந்தால் சருமத்தின் சுருக்கம் நீங்குவதோடு இளமை திரும்பும். எண்ணெய்ப் பசை சருமத்தினர் அனைவரு க்குமே ஏற்ற சிகிச்சை யாகும் இது!

வறண்ட சருமம் உள்ளவர்கள், இரண்டு வாழைப்பழத் துண்டு களுடன், 2 டேபிள் ஸ்பூன் தர்பூசணி விழுது சேர்த்து நன்றாகப் பூச வேண்டும். 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், சருமம் மிருதுவாகி மினுமினுக்கும்.

எண்ணெய்ப் பசை சருமத்தினர், 2 டேபிள் ஸ்பூன் தர்பூசணி விழுதுடன் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர, அதிகப்படியான எண்ணெய்ப் பசை விலகும்.

விதை
இளமையை துடிக்க வைக்கும் தர்பூசணியின் அற்புத பலன்கள் !
தர்பூசணியில் பழம் மட்டுமல்ல... அதன் விதையும் கூட அரும் பணியாற்றுகிறது. கூந்தலைப் பராமரிப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

அரைக் கிலோ நல்லெண்ணெயில் வெந்தயப் பவுடர் - 50 கிராம், தர்பூசணி விதை பவுடர் - 50 கிராம் சேர்த்துக் காய்ச்ச வேண்டும்.

இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் போட்டு, வாரம் இரண்டு நாட்கள் குளித்து வந்தால் கண்டிஷனிங் செய்தது போலக் கூந்தல் பளபளக்கும்.
கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் யார் யார் எவ்வளவு குடிக்கலாம்?
மேலும், 100 கிராம் சீயக்காய், 100 கிராம் தர்பூசணி விதை மற்றும் 20 கிராம் வெட்டிவேர், 100 கிராம் பயத்தம் பருப்பு சேர்த்துக் காய வைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பொடியைக் கொண்டு வாரம் இரண்டு நாள் தலையை அலசி வர, கூந்தல் பட்டுப் போல மின்னும்.

ஒரு டீஸ்பூன் கடுகுப் பொடியுடன், ஒரு டீஸ்பூன் தர்பூசணி ஜூஸைக் கலந்து பூசினால், மங்குகள் உள்ள பகுதியில் தர்பூசணியின் சாறு ஊடுருவிச் சென்று மங்குகளை மறையச் செய்யும்.

தர்பூசணி விதை எண்ணெயை (இது கடைகளில் கிடைக்கிறது) பிறந்த குழந்தைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டி வர, சருமம் மெருகேறி ஜொலிக்கத் துவங்கும்.

கவனம்
இளமையை துடிக்க வைக்கும் தர்பூசணியின் அற்புத பலன்கள் !
தர்பூசணி கோடைக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், அதிகமாகச் சாப்பிடால். பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் பிரச்னைகள் ஏற்படுத்தும் என்கிறார்கள்.

92 சதவிகிதம் நீரின் பங்கு இருப்பதால் அஜீரணக் கோளாறு, வயிற்றுப் போக்கு மற்றும் வயிறு உப்புசம் அடைதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
மேலும், தர்பூசணியில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், மிக எளிதாகக் கொழுப்பாக மாறும் தன்மை உடையது. சளிப் பிரச்னை உள்ளவர்கள், தர்பூசணியைச் சாப்பிட வேண்டாம்.

அப்படி மீறி சாப்பிட்டால் அதிகப் படியான காய்ச்சல், தொண்டை கரகரப்பு மற்றும் சிறுநீரின் நிறம் மாறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப் புள்ளது. சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், அளவுக்கு அதிகமாகத் தர்பூசணி சாப்பிட வேண்டாம். 
இளமையை துடிக்க வைக்கும் தர்பூசணியின் அற்புத பலன்கள் !
காரணம் இதில் உள்ள அதிகப் படியான நீரின் அளவு சிறுநீரகப் பிரச்னையை அதிகப்படுத்த வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என்றாலும் அதிகமாகச் சாப்பிட்டால் உயர் சர்க்கரை அளவு ஏற்பட்டுப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
வெண்டைக்காய் சிப்ஸ் செய்வது எப்படி?
அதிகப் படியாகத் தர்பூசணி சாப்பிடுவதால் கர்ப்பிணி களுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப் புள்ளது. அத்துடன் அவர்களுக்குச் சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது.
Tags: