மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?





மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

அசைவம் பலருக்கும் பிடிக்கும். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் ஒன்று சிக்கன். சிக்கன், மட்டன், மீன் எனப் பல வகைகளை ருசியாக செய்து சாப்பிடுவோம். 
மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?
இதில் மதுரை ஸ்டைல் என்றால் சொல்லவே வேண்டாம். சுவை அள்ளும். சிக்கனை எப்படி செய்து கொடுத்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 
தேனீ கடித்து மருத்துவ சிகிச்சையில் பியர் கிரில்ஸ் !
அதிலும் தற்போதைய காலத்தில் சிக்கனை கொண்டு விதவிதமாக புதிய உணவுகளை செய்து அசத்தி வருகிறார்கள். ஆனால் சிக்கனை கொண்டு செய்யப்படும் பல பாரம்பரிய உணவு வகைகளும் உள்ளன. 

அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபியானது சிக்கன் குழம்பு ஆகும். மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து பாரம்பரியமான முறையில் எவ்வாறு காரசாரமான மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

வெங்காயம் - 2 ( நறுக்கியது)

தக்காளி - 2 ( நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 5 ஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...
வரமிளகாய் - 6

மல்லி - 2 ஸ்பூன்

மிளகு - 1 ஸ்பூன்

சோம்பு - 1/2 ஸ்பூன்

கசகசா - 1 ஸ்பூன்

உடைத்த கடலை - 1 ஸ்பூன்

பட்டை - 1 இன்ச்

கிராம்பு - 3

தேங்காய் - 1 பத்தை

தாளிப்பதற்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன்

பிரியாணி இலை - 1

சோம்பு - 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் - 2
நரம்பு முடிச்சு நோய் வர காரணம் ?
செய்முறை:
மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை கடாயில் போட்டு பொன்னிற மாக வறுத்து இறக்கி,

ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்ப தற்கு கொடுத்து ள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின்பு அதனுடன் தக்கா ளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் சிக்கன் துண்டு களை சேர்த்து, மஞ்சள் தூள் போட்டு, சிக்கனின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்து வைத் துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து 

பின்பு அடுப்பை 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்தால் குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரிந்ததும் இறக்கி. கொத்த மல்லியைத் தூவி மூடி வைக்கவும்
Tags: