தேவையானபொருள்கள்
ஆட்டு ஈரல் - கால் கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி (தேவைக்கு)
பச்சை மிளகாய் - ஒன்று
மல்லித் தளை - சிறிது
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
செய்முறை
ஆட்டு ஈரலை நன்கு சுத்தம் செய்து கழுவி தேவையான அளவில் நறுக்கி எடுத்து வைக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளி, பச்சை மிளகாயை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய பட்டை போட்டு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் ஈரல் மற்றும் எல்லா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறி குறைந்த தீயில் வேகவிடவும்.
நன்கு வெந்ததும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொத்துமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
இப்போது சுவையான ஆட்டு ஈரல்ஃப்ரை ரெடி!