சுவையான முந்திரி கொத்து செய்வது எப்படி?





சுவையான முந்திரி கொத்து செய்வது எப்படி?

முந்திரி கொத்து, தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் காணப்படும் ஒரு சிறப்பு உணவுப் பண்டம். இதே மாதிரியான இனிப்பு வகையை சிறிய மாற்றங்களுடன் யாழ்ப்பாணத்தி லும் செய்வார்கள். 
முந்திரி கொத்து
இதற்கு பெயர் பயற்றம் பணியாரம். மண்டை வெல்லத்திற்குப் பதிலாக வெல்லம், சீனி சேர்ப்பார்கள்.வாசனைக்கு ஏலத்துடன் லேசாக வறுத்த சீரகம், மிளகு பொடி செய்து சேர்க்கப்படும். 
குமரி முனையும், அதன் அருகில் இருக்கும் யாழும் விரும்பிச் சமைக்கும் பதார்த்தம் இதோ கிருஷ்ண ஜெயந்தியில் உங்களுக்காக… 

தேவையான பொருட்கள் :

பாசிப்பயிறு – 250 கிராம் 

வறுகடலை – 150 கிராம் 

பனங்கற்கண்டு – 200 கிராம் 

வறுத்த எள்ளு – 50 கிராம் 

தேங்காய் துருவல் – 1 மூடி 

மைதா மாவு – 250 கிராம் 

உப்பு – சுவைக்கேற்ப 

ஏலக்காய் பொடி – சிறிதளவு 

சுக்கு பொடி – சிறிதளவு 

செய்முறை  :
பாசிப்பயிரை தோலுடன் லேசாக வறுத்து, அதை உடைத்து வைத்துக் கொள்ளவும்.
வறுகடலை மற்றும் உடைத்த பாசிப்பயிறு, பனங்கற்கண்டு ஆகிய வற்றை தனித்தனியாக நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை நெய்யில் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும். 

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, அதில் வறுத்த எள்ளு, ஏலக்காய் பொடி, சுக்கு பொடி கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 

கெட்டியாக பிசைந்து, அதை சிறுசிறு உருண்டை களாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். 
இலவச தையல் இயந்திரம் பெற முழு விவரம் தெரிந்து கொள்ள ! 
மைதா மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொண்டு அதில் இந்த உருண்டை களை நனைத்து காய்ந்த எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான முந்திரி கொத்து ரெடி.
Tags: