சுவையான காய்கறி பரோத்தா செய்வது எப்படி?





சுவையான காய்கறி பரோத்தா செய்வது எப்படி?

0
ஆலூ பரோட்டா, கொத்துப் பரோட்டா, மெலிதான வீச்சுப் பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிய மலபார் பரோட்டா, 
சுவையான காய்கறி பரோத்தா செய்வது எப்படி?
சிலோன் பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டைப் பரோட்டா, காலிஃப்ளவர் பரோட்டா என்று பல விதமான பெயர்களில் பல்வேறு சுவைகளில் உருவாகும் புரோட்டா. 

இந்த புரோட்டாவின் தாயகம் இலங்கை என்று சிலர் சொன்னாலும் அது இந்திய துணைக் கண்டத்தில் இருந்த இப்போதைய பெஷாவர் தான் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் புரோட்டா மேல் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக சொல்கிறார்கள்.

தேவையான பொருட்கள்:

பரோட்டாக்கள் – 10

வெங்காயம்- 2

நாட்டுத் தக்காளி (பெரியது) – 1

குடமிளகாய் (பெரியது)௧

காரட்- 1

பட்டாணி- 1 டம்ளர்

கொண்டைக் கடலை சுண்டல்- 1 டம்ளர்

பூண்டு- 2 பல்லு

எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன்

கொத்தமல்லி- அலங்கரிக்க

காரப்பொடி- 2 டீஸ்பூன்

கேஸரி கலர் (சிவப்பு நிற)- 1/2 டீஸ்பூன்

பட்டை – 8

சோம்பு- 2 டீஸ்பூன்

ஏலக்காய்- 2

கிராம்பு- 6

எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:
  
காய்கறி பரோத்தா செய்வது எப்படி?

பரோட்டாக்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொண்டைக் கடலையை முந்தின நாள் இரவே ஊற வைத்து கொத்து பரோட்டா செய்யும் வேளையிலே 

குக்கரில் சுண்டல் செய்யும் பதத்திற்கு ஏற்ப வேக வைத்துத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து, வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காய த்தைச் சிவக்க வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கின பூண்டையும் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கினதும் தக்காளி, குடமிளகாய் போட்டு சற்று வதக்கவும். தண்ணீர் விடத் தேவை யில்லை.

காரட், பச்சைப் பட்டாணி யையும் சேர்த்து உப்பு, காரப்பொடி சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்.

மசாலா க்குத் தேவையான பொருட்களைப் பச்சை யாகவே திரித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகள் வெந்தவுடன் மசாலாப் பொடி, சிவப்பு நிறமூட்டி சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இதனுடன் வேக வைத்த கொண்டைக் கடலையைச் சேர்த்து காய்களுடன் ஒன்று சேர்க்கவும். காரம் பார்த்து விட்டு எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கவும்.

பரோட்டா துண்டுகளைக் காய்கறிக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். அலங்காரத் திற்குக் கொத்த மல்லித் தழைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்:

எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வெஜிடபிள் பரோட்டாக் களைச் செய்யலாம்.

காரப்பொடிக்குப் பதிலாக கடலைப் பருப்பு (1 டீஸ்பூன்), தனியா (1 டீஸ்பூன்), வெந்தயம் (5), மிளகாய் வற்றல் (4 டீஸ்பூன்) ஆகியன வற்றை வாசனை வரும் வரை வறுத்து ஆற விட்டுப் பொடித்து காய்களில் சேர்த்தும் செய்யலாம்.
இவ்வகை முறையில் காரப்பொடியால் காரம் கூடி விட்டது போன்ற பதட்டங் களைத் தவிர்க்கலாம். காரப்பொடிக்குப் பதில் வீட்டில் தயாரித்த சாம்பார் பொடியையும் பயன் படுத்தலாம்.

எலுமிச்சைச் சாற்றைக் காய்கறிகள் வதங்கினதும் பரோட்டாக் களைச் சேர்க்கும் முன்பு தான் போட வேண்டும்.

இவ்வகை பரோட்டாக் களுக்கு ஆனியன் ரெய்தா, வெஜிடபிள் ரெய்த்தா, வெள்ளரிப் பச்சடி போன்றன சிறந்த இணைகள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)