டேஸ்டியான வாழைப்பூ வடை செய்வது எப்படி?





டேஸ்டியான வாழைப்பூ வடை செய்வது எப்படி?

வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும்  குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.
டேஸ்டியான வாழைப்பூ வடை செய்வது எப்படி?
கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம். வெள்ளைப் படிதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. 

இவர்கள் வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல்  கட்டுப்படும். வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை  நீங்கும்.
வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூல நோய் குணமாகும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம்  குணமாகும். தாது விருத்தியடையும்.
வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால்  எரிச்சல் குணமாகும்.

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக் கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். 

இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

தேவையான பொருள்:

கடலைப்பருப்பு  – 100 கிராம்

துவரம் பருப்பு – 50 கிராம்

சின்ன வெங்காயம்  - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு

சோம்பு – சிறிது

மிளகாய் வத்தல்   - 2
வாழைப்பூ - தேவைக்கு

உப்பு  –  தேவைக்கு

மஞ்சள் தூள் - சிறிது

செய்முறை:

வாழைப்பூ வடை
முதலில் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு  கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வாழைப்பூவை நரம்பு எடுத்துத் தனியாக அரைக்கவும். இப்போது நன்கு ஊறிய பருப்புடன் சோம்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், உப்பு இவற்றைச் சேர்த்து அரைக்கவும்.

அரைத்த வாழைப் பூவையும், வெங்காய த்தையும் இதனுடன் சேர்த்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
இப்போது வாழைப்பூ வடை தயார். சிறுநீரகத்தில் கோளாறு இருப்பவர்கள் இதனைச் சாப்பிடலாம். மாலை நேரத்தில் குடிக்கும் தேநீரோடு இதனைச் சேர்த்து சாப்பிடுவதும் தனிச் சுவையாக இருக்கும்.
Tags: