கொல்கத்தா ஸ்பெஷல் ஜால் முரி செய்வது எப்படி?





கொல்கத்தா ஸ்பெஷல் ஜால் முரி செய்வது எப்படி?

0

ஜால் என்றால் காரம் என்று பொருள், முரி என்றால் பொரி என்று அர்த்தம். அதாவது ஜால் முரி என்பதற்கு காரப் பொரி என்று பொருள். 

கொல்கத்தா ஸ்பெஷல் ஜால் முரி
இந்த ஜால் முரியானது மாலை வேளையில் டீ/காபியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சிறந்தது.

தேவையான பொருட்கள்:

பொரி – 2 கப்

உருளைக்கிழங்கு – 2

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 4

சேவ்/மிக்ஸர் – 1/2 கப்

கருப்பு கொண்டைக்கடலை – 1/2 கப்

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

ஊறுகாய் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

கடுகு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் துண்டுகள் – சிறிது

செய்முறை :

உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, ப.மிளகாய், கொத்த மல்லி, தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

கருப்பு கொண்டைக் கடலையை ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக போட்டுக் கைகளால் அல்லது கரண்டியால் நன்கு கிளறி விட்டு பரிமாறினால், ஜால் முரி ரெசிபி ரெடி!

குறிப்பு :

மாலை நேரத்தில் டீ, காபியுடன் இதை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் விருப்பான ஸ்நாக்ஸ் இது. இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்ய முடியும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)