எந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது !





எந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது !

* தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகி விடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும்.
எந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது
* வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.

* பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய் விடும்.
தஞ்சாவூருக்கு காந்திஜி ரோடு வந்த கதை !
* வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

* மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு உண்டால் “வெண் மேகம்“ போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

* காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்கக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர் குடிக்கலாம்.

* உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.

* ஆஸ்துமா, சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
உடலில் தேவையற்ற உடல் பாகங்கள் !
* மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

* நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக் கூடாது.
* வயிற்றுப்புண், மஞ்சள் காமாலை உள்ளவர்கள் மிளகாய், ஊறுகாய் ஆகிய வற்றைச் சேர்க்க கூடாது.

* பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகிய வற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.

* தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகிய வற்றைச் சாப்பிடக்கூடாது.

* கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

* மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக் கூடாது.
Tags: