சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர் களுக்கு இந்த மிளகு, சீரக சாதம் இதமாக இருக்கும். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி – 2 கப்
மிளகு – 3 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
நெய் – 3 முதல் 4 டீஸ்பூன் வரை
முந்திரிப் பருப்பு – சிறிது
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியைக் கழுவி குக்கரில் போட்டு அத்துடன் 5 கப் தண்ணீரை விட்டு 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக விட்டு வைத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனி யாகப் போட்டு வறுத்தெடுத்து, கொர கொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் நெய்யை விட்டு முந்திரிப் பருப்பைப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காய த்தை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் வேக வைத்துள்ள சாதம், மிளகு, சீரகப் பொடி, உப்பு ஆகிய வற்றை போட்டு, நன்றாகக் கலந்து, இறக்கி கத்திரிக்காய் கொஸ்துடன் பரிமாறவும்.
சத்தான மிளகு, சீரக சாதம் ரெடி.
கவனிக்க: அதிக காரம் விரும்பாத வர்கள், மிளகு, சீரகப் பொடியை சற்று குறைத்துக் கொள்ளவும். அல்லது நெய்யைக் கூட்டிக் கொள்ளவும்