என்னென்ன தேவை?
அவரைக்காய் - 1 கப்
பாசிப் பருப்பு -1/3 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கு
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
அரைக்க...
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
மிளகு - சிறிது
சீரகம் - 1/4 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி வைக்கவும். இவற்றை ஜாரில் எடுத்து மசித்து வைக்கவும்.
குக்கரில் அவரைக்காய், பாசிப் பருப்பு எடுத்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் 3/4 கப் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு, சமைத்து வைத்துள்ள பருப்பு கலவையை ஊற்றி அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வெந்த பின் கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.