சிறுதானிய காய்கறி இட்லி செய்வது எப்படி?





சிறுதானிய காய்கறி இட்லி செய்வது எப்படி?

நம் முன்னோர்களால் ஆதி காலத்திலிருந்தே உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவில் முதல் இடத்தைப் பிடிப்பவை சிறுதானிய வகைகளான குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவை தான். 
சிறுதானிய காய்கறி இட்லி
அதிக சத்துக்களுடன் நிறைய மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய சிறுதானியங்கள் ஏழைகளின் உணவாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலை மாறி, சிறுதானிய உணவுப் பழக்கம் வீடுகளில் தொடங்கி உணவகங்கள் வரை பரவத் தொடங்கியுள்ளது.

சர்க்கரை நோயாளிகள், வயதான வர்கள் சிறுதானிய உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது. இந்த வகையில் இன்று சிறுதானிய காய்கறி இட்லி செய்முறையை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் :

வரகு, சாமை, திணை, குதிரை வாலி (நான்கு தானியங்களின் குருணைகள்) – ஒரு கப்

பயத்தம் பருப்பு – கால் கப்

உளுத்தம் பருப்பு – அரை கப்

இஞ்சி – சிறிய துண்டு

பீன்ஸ் – 10,

பச்சைமிளகாய் – 3

கேரட் – 1

பட்டாணி – அரை கப்

கொத்த மல்லி, பெருங்காயத் தூள், உப்பு, நெய் – தேவையான அளவு

செய்முறை :

சிறுதானிய குருணை களை 1 மணி நேரம் ஊற விடவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். கொத்த மல்லி, பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

பயத்தம் பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊற விட்டு, பின் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த குருணைகள், பச்சை மிளகாய், தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

ஒரு பாத்திர த்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் கொத்த மல்லி, உப்பு, பீன்ஸ், கேரட் துருவல், பட்டாணி சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.(தேவைப்ப ட்டால் சிறிதளவு தயிர் சேர்க்கவும்).

பின்னர் இட்லி தட்டில் சிறிதளவு நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை ஊற்றி, வேக வைத்து எடுக்கவும். இந்த இட்லி சத்தானது, எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. சர்க்கரை வியாதி உள்ளவர் களுக்கு மிகவும் ஏற்றது இந்த இட்லி.
Tags: