தேவையானவை :
ஜவ்வரிசி - கால் கப்
சேமியா - கால் கப்
சர்க்கரை - அரை கப் (உங்களின் இனிப்புக் கேற்ப)
பால் - அரை கப்
ஏலக்காய் - ஒன்று
அலங்கரிக்க :
நெய் - முந்திரி & திராட்சையை வறுக்குமளவு
முந்திரி - 5
திராட்சை - 5
குங்குமப்பூ - நான்கைந்து இதழ்கள் (இல்லை யென்றாலும் பரவா யில்லை)
நெய் - முந்திரி & திராட்சையை வறுக்குமளவு
முந்திரி - 5
திராட்சை - 5
குங்குமப்பூ - நான்கைந்து இதழ்கள் (இல்லை யென்றாலும் பரவா யில்லை)
செய்முறை :
வெறும் வாணலை அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் ஜவ்வரிசியைப் போட்டு தீய்ந்து விடாமல் வறுக்கவும். வறுக்கும் போதே நமக்குத் தெரியும்
ஜவ்வரிசி உருண்டுருண்டு அளவில் கொஞ்சம் பெரிதாகும். வறுபட்டதும் இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
அது முடிந்ததும் சேமியாவைப் போட்டு சூடுவர வறுத்துக் கொள்ளவும்.
ஒரு கனமான பாத்திர த்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி காய்ந்ததும் ஜவ்வரிசியைக் கழுவி சேர்க்கவும்.
அது நன்றாக வெந்து வரும் போது சேமியாவை சேர்க்கவும். (இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் சேமியா முதலில் வெந்து குழைந்து விடும்)
இரண்டும் வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்து கரைந்ததும், பாலைச் சேர்த்து கிண்டி விட்டு,
தேவை யானால் தண்ணீர் சேர்த்து, குங்குமப்பூ, பொடித்த ஏலக்காய் சேர்த்து இறக்கி, நெய்யில் முந்திரி & திராட்சையை வறுத்து சேர்க்கவும்.
பாயசத்தைத் தனியாக மட்டு மல்லாமல், உளுந்து வடை அல்லது அப்பளத் துடன் சேர்த்து சாப்பிட ஆஹா என்றி ருக்கும் !
சூடாக இருக்கும் போது நீர்த்து இருக்கும், ஆற ஆற இறுகி கெட்டி யாகும். எனவே கொஞ்சம் நீர்க்க செய்வது நல்லது.
இதனை வெறும் ஜவ்வரிசியை வைத்தோ அல்லது சேமியாவை மட்டுமே வைத்தோ கூட செய்யலாம்.