திபாவளிக்கு பொட்டுக்கடலை வைத்து ஸ்வீட் செய்வது எப்படி?





திபாவளிக்கு பொட்டுக்கடலை வைத்து ஸ்வீட் செய்வது எப்படி?

0

பொட்டுக்கடலையை தேங்காயுடன் சேர்த்து சட்னியாக சாப்பிடுவது நம் உணவு வழக்கத்தில் இருக்கிறது. உடைத்த கடலையில் உள்ள ஊட்டச்சத்துகள் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன.

திபாவளிக்கு பொட்டுக்கடலை வைத்து ஸ்வீட் செய்வது எப்படி?
உடைத்த கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. 

நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். 

உடைத்த கடலை பருப்பை சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உயரதிற்கு ஏற்ற உடல் எடையை பெற உதவுகிறது. 

உடல் பருமன் உள்ளவர்கள் பொட்டுக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை குறையும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். திபாவளிக்கு நீங்க ரெடியா? பாரம்பரிய ஸ்வீட் ரெசிபி இது. 

இதயத்தில் ஓட்டை இருப்பதை வெளிக்காட்டும் முக்கிய அறிகுறிகள் !

மிஸ் பண்ணாம செய்து பாருங்க பொட்டுக்கடலை வைத்து பாரம்பரிய முறையில் இப்படி செய்யுங்க. ரொம்ப ஈசியான ரெசிபி. 

தேவையான பொருட்கள் . :

1 கப் பொட்டுக்கடலை 

அரை மூடி தேங்காய்

1 கப் வெல்லம் 

அரை கப் தண்ணீர் 

நெய் 2 ஸ்பூன் 

ஒரு சிட்டி கை ஏலக்காய் தூள்

ஒரு சிட்டிகை உப்பு

1 கப் இட்லி மாவு 

கால் கப் மைதா மாவு

ஆப்ப சோடா 

பொறிக்கும் அளவு எண்ணெய்

செய்முறை :  .

திபாவளிக்கு பொட்டுக்கடலை வைத்து ஸ்வீட் செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து இதை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து கொள்ளவும். 

இது போல தேங்காய் துருவி எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வெல்லம் சேர்த்து கரைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அரைத்த பொட்டுக் கடலையை சேர்க்கவும். 

ஆண்களை திருப்திபடுத்த பெண்கள் செய்ய வேண்டிய செயல்கள் தெரியுமா?

அதை கிளர வேண்டும். அதில் வெல்ல பாகை ஊற்றி கிளரவும். தேங்காய் துருவியதை சேர்க்கவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும். தொடர்ந்து இட்லி மாவில், மைதா மாவு சேர்த்து, ஆப்ப சோடா சேர்க்கவும். 

தொடர்ந்து செய்து வைத்த பொட்டுக்கடலை பூரணத்தை சிறிய உருண்டைகளாக பிடித்து மாவில் முக்கி, பொறித்து எடுக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)