அன்னாசி பூவின் மருத்துவ நன்மைகள் தெரிந்து கொள்ள !





அன்னாசி பூவின் மருத்துவ நன்மைகள் தெரிந்து கொள்ள !

0

குருமா மற்றும் பிரியாணி போன்ற உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களில் அன்னாசி பூவும் இடம் பெற்று இருக்கும். இதனை ஸ்டார் அனீஸ் (Star Anise) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். 

அன்னாசி பூவின் மருத்துவ நன்மைகள் தெரிந்து கொள்ள !

இதனை பெரும்பாலானோர் உணவுகளின் மனத்திற்காக சேர்ப்பதாகவே எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், நமது பாரம்பரிய உணவுகளில் அன்னாசி பூவிற்கும் தனியொரு இடம் உள்ளது.

அஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள் !

அஞ்சறை பெட்டியில் இருக்கும் கடுகு, வெந்தயம், சீரகம் மற்றும் மஞ்சள் போன்ற பல பொருட்களுடன் அன்னாசி பூவும் இருக்கும். 

அன்னாசிப்பூவில் பல விதமான மருத்துவ குணங்கள் உள்ளது.  இது நட்சத்திர வடிவம் கொண்ட ஒரு மசாலா பொருள். 

அன்னாசிப்பூவில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் மூலமாக உடலுக்கு நலம் கிடைக்கிறது. 

அன்னாசி பூ பெரும்பாலும் இந்திய மற்றும் சீன சமையல் முறைகளில் ஜீரணத்திற்காகவும், உணவு வாசனையாகவும் சேர்க்கப் படுகிறது. 

குறைந்தளவு கலோரிகள் அன்னாசிப்பூவில் இருப்பதால், உடல் பருமன் கொண்டவர்கள் உணவுடன் சேர்த்து கொள்ளலாம்.  

அந்த வகையில், முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடியதும், காய்ச்சல் மற்றும் உடல் வலியை போக்கவல்லதும், வயிறு உப்புசத்தை சரிசெய்ய கூடியதுமான  அன்னாசி பூவின் நன்மை குறித்து பார்க்கலாம். 

4400 மீட்டர் உயரத்தில் உயிர்கள் படிமம்... எந்த கிராமத்தில் தெரியுமா?

அன்னாசி பூ மணம் தரக்கூடியது. உணவாவது மட்டுமின்றி உன்னதமான மருந்தாக விளங்குகிறது. மாதவிலக்கு பிரச்சனையை சரிசெய்கிறது. மாதவிலக்கை தூண்டி  முறைப் படுத்துகிறது. 

அஜீரணக் கோளாறுகள், இதயம் பாதிப்பு, வாய் துர்நாற்றம், நுரையீரல் பாதிப்பு, சளி தொந்தரவு, உயர் ரத்த அழுத்தம், குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள்  பாதிப்பு போன்றவைகளுக்கு அன்னாசிப்பூ அருமருந்து. 

தாய்ப்பாலை பெருக்க கூடிய அற்புத சக்தி உடையது. அதிக சத்துக்கள் உள்ள இது, புற்று நோய்களை உண்டாக்கும் நச்சுகளை வெளியேற்றும். 

அன்னாசி பூவின் மருத்துவ நன்மைகள் தெரிந்து கொள்ள !

செரிமானத்தை  தூண்டும். சளி, இருமல் காய்ச்சலை போக்கும் நல் மருந்தாகிறது. அன்னாசி பூவை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: அன்னாசி பூ, பெருங்காயம், பனைவெல்லம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன், ஒரு ஸ்பூன் பனை வெல்லம் சேர்க்கவும். 

வியட்நாமில் பார்வையில்லாத மகளை கர்ப்பமாக்கிய தந்தை !

இளம் வறுப்பாக வறுத்து பொடி செய்த அன்னாசி பூ பொடி அரை ஸ்பூன் அளவுக்கு போடவும். கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும்.

இதை தினமும் காலை வேளையில் எடுத்துவர தடைபட்ட  மாதவிலக்கு பிரச்னை சரியாகும். மாதவிலக்கை சீர் செய்கிறது. 

இளம் தாய்மார்களுக்கு பால் பெருக்கியாக விளங்கிறது. பெண்களின் கூந்தலை பராமரிக்கவும், அஜீரண கோளாறுகள், இதய பாதிப்பு, வாய் துர்நாற்றம், நுரையீரல் பாதிப்பு மற்றும் சளி தொந்தரவு 

போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் பிரச்சனையையும் சரி செய்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)