தக்காளி தொக்கு சுவையில் தயிர் பயன்படுத்தி சட்னி செய்வது எப்படி?





தக்காளி தொக்கு சுவையில் தயிர் பயன்படுத்தி சட்னி செய்வது எப்படி?

0

தயிர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று பாலிலிருந்து உருவாவது தான் தயிர். தயிரிலிருந்து உருவாவது தான் மோர். 

தயிர் பயன்படுத்தி சட்னி செய்வது
தயிரின் ஒரு பகுதிதான் நெய். ஆனால், இவற்றின் குணாதிசயங்கள் வெவ்வேறாக காணப்படும். தயிர், கார்டிசால் சுரப்பை தூண்டி, சம நிலையில் வைக்க உதவுகிறது. 

இதனால் உடல் எடை குறையும். தயிர் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது. நரம்புகளில் ஏற்படும், இறுக்கத்தை தளர்த்தி, புத்துணர்வோடு இருக்கச் செய்கிறது. மூளையின் செயல்களை தூண்டுகிறது.

இத்தகைய நல்ல குணம் உடைய தயிரில் இருந்து தக்காளி தொக்கு சுவையில் சட்னி செய்வதை இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

தயிர் - 1/2 கப்

பெரிய வெங்காயம் - 1

மிளகாய் தூள் - 1 tsp

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp

கடுகு - 1 tsp

எண்ணெய் - 1 tbsp

தனியா தூள் - 2 tsp

கரம் மசாலா தூள் - 1/2 tsp

உப்பு - தேவையான .அளவு

செய்முறை :

தக்காளி தொக்கு சுவையில் தயிர் பயன்படுத்தி சட்னி

ஃபிரெஷான கெட்டித் தயிர் வாங்கிக் கொள்ளுங்கள். அதை நன்கு கட்டிகள் இல்லாமல் அடித்துக் கொள்ளுங்கள். பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்துக் கலந்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு தாளியுங்கள். பொறிந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள்.

அடுத்ததாக வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வெந்ததும், கரைத்து வைத்துள்ள தயிரை ஊற்றி உடனே கிளறுங்கள்.

பின் தயிர் இருந்த பாத்திரத்திலேயே கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றி சுற்றிலும் ஒட்டியிருக்கும் தயிரை வழித்து விட்டு கடாயில் ஊற்றுங்கள். 

அடுத்ததாக தட்டுப் போட்டு மூடி 10 நிமிடங்களுக்குக் கொதிக்க விடுங்கள். கொதிந்ததும் மூடியை திறந்து பார்க்க தயிர் கெட்டியாகி இருக்கும்.

அதை மேலும் கிளறிக் கொண்டே இருந்தால் தண்ணீர் இறுகி கெட்டியாக வரும். பின் கொத்த மல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் சட்னி தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)