காலை உணவு தவிர்ப்பது நல்லதல்ல. ஆற்றலை அளிப்பதில் முக்கிய பங்கு உண்டு !





காலை உணவு தவிர்ப்பது நல்லதல்ல. ஆற்றலை அளிப்பதில் முக்கிய பங்கு உண்டு !

0

காலை உணவு தான் அன்றைய நாளின் மிக முக்கிய உணவு. அன்றைய நாளுக்கான ஆற்றலை அளிப்பதிலும் காலை உணவிற்கு முக்கிய பங்கு உண்டு. 

காலை உணவு தவிர்ப்பது நல்லதல்ல
காலை உணவைத் தவறுவது வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். உடல் பருமனை அதிகரிக்கும். அதைத் தொடர்ந்து பல வகையான நோய்களையும் உண்டாக்கலாம். 

இதைத் தவிர்க்க ஆரோக்கியமான காலை உணவை தினமும் தவறாமல் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

மொய் விருந்து கணக்கை பதிவு செய்ய ‘மொய் டெக்’ சாப்ட்வேர் !

இரவு உணவு முடிந்து தோராயமாக 7 மணி நேர உறக்கத்துக்குப் பின் காலை உணவை எடுத்துக் கொள்ளத் தயாராகிறோம். 

இந்த, நீண்ட இடைவெளிக்குப் பின் உடல் இயங்க ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே, நமது சீரண உறுப்புகள் உணவைப் பெற்று ஜீரணித்து சக்தியை உடலுக்கு அளிக்கத் தயாராக இருக்கும். 

மேலும் உடலுறுப்புகள் மற்றும் மூளை இயங்க குளுக்கோஸ் மிகவும் அவசியம். இந்தக் குளுக்கோஸ் காலை உணவிலிருந்து உடலால் உட்கிரகிக்கப்படும். 

PF என்றால் என்ன? தொிந்து கொள்ள

ஒரு வேளை காலை உணவைச் சாப்பிடாமல் விட்டால், மூளை தனது ஆற்றலை இழந்து சோர்வடையும்.

குழந்தைகள் தொடங்கிக் கல்லூரி மாணவர்கள் வரை

குழந்தைகள் தொடங்கிக் கல்லூரி மாணவர்கள் வரை

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், சிறந்த கல்வி நிலையம், மிகத் திறமையான ஆசிரியர்கள், வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதலாவதாக வரும் மாணவராக இருந்தாலும், 
உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்க !

காலை உணவை அவர் தவிர்க்கும் போது, அவர்களின் இயல்பான திறன் வெளிப்படுவதில்லை என்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. 

இப்படிப் பால் மட்டும் குடித்து விட்டு உணவைத் தவிர்க்கும் குழந்தைகள் காலை 10, 11 மணிக்குள் சோர்ந்து விடுவார்கள். 

வகுப்பில் நடத்தப்படும் பாடங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது.

இப்படி மழலைப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தொடங்கிக் கல்லூரி செல்லும் மாணவர்கள், 

ஸ்டெம் செல்ஸ் சிறப்பு விழிப்புணர்வு பார்வை !

வேலைக்குச் செல்பவர்கள் எனப் பலரும் இன்றைக்குத் தவிர்க்கக் கூடிய ஒரு விஷயமாக உருவெடுத்திருக்கிறது காலை உணவு. எந்த அளவுக்கு காலை உணவு முக்கியம்.

பிரேக்-பாஸ்ட்

பிரேக்-பாஸ்ட்

ஒரு நாளில் அதிக இடைவெளிக்குப் பிறகு நாம் உண்பது (ஏறக்குறைய 10 மணி நேரம்) காலை உணவு தான். அதனால் தான் அதை ‘பிரேக்-பாஸ்ட்’ என்று அழைக்கின்றனர். 

நீராவிக் குளியல் உள்ள சிறப்புகள் !

அதாவது நீண்ட விரதத்தை உடைப்பது என்று அர்த்தம். பாரம்பரியமாக நமது வீடுகளில் செய்யப்படும் உப்புமா, இட்லி, பொங்கல் போன்ற காலை உணவுக்கு ஈடு இணையே இல்லை. 

இதன் தயாரிப்பிலும் சாப்பிடும் முறையிலும் சமச்சீரான சத்துகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது. 

இட்லியில் உளுந்தின் மூலம் மாவுச் சத்து, சட்னி, சாம்பாரோடு சேர்த்துச் சாப்பிடும் போது குறைந்த அளவில் கொழுப்பு, அதிக அளவில் புரதச் சத்து போன்றவை கிடைக்கின்றன. 

பள்ளி செல்லும் குழந்தைகள் வீட்டில் தயாரிக்கப்படும் இத்தகைய ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லதல்ல.

உணவே மருந்து

உணவே மருந்து

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்ற திருமூலர் வாக்கில் தொடங்கி 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்ற பழமொழி வரை 

அனைத்தும் உணவின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் பெறப்படும் உடல் நலத்தையும் எடுத்துரைப்பதாகவே உள்ளன. 

இரண்டடிக் குறள், 'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்' என்கிறது. 

முன்பு உண்ட உணவு செரிமானம் ஆகிவிட்டது என்பதை அறிந்து பசி எடுத்த பின், அடுத்த வேளை உணவு உட்கொள்ள வேண்டும்; 

லெமன் பெப்பர் மீன் வறுவல் செய்முறை !

அவ்வாறு உண்டால், ஒரு மனிதனின் உடலுக்குத் தனியாக மருந்து என எந்தவொரு தேவையும் இருக்காது, அந்த உணவே மருந்தாகும் என்று சொல்கிறது திருக்குறள்.

சாப்பிடும் முறை

சாப்பிடும் முறை

சாப்பிடும் போது சாய்ந்து படுத்துக் கொண்டோ, நின்று கொண்டோ சாப்பிடக்கூடாது. விரும்பிய உணவாக இருந்தாலும் வயிறு புடைக்க உண்ணக்கூடாது. 
சச்சின் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி - ஆப்கானிஸ்தான் வீரர் !

வெட்ட வெளியில் நின்று உண்ணக்கூடாது. அதே போல் கட்டில் மேல் அமர்ந்தும் உண்ணக்கூடாது.

சாப்பிடும் போது சம்மணமிட்டு அமர்ந்து, உட்கார்ந்திருக்கும் நிலைக்கு சிறிது கீழே உண்ணும் பாத்திரத்தை வைத்து உண்ண வேண்டும். 

இந்த பொசிஷனே உணவு இரைப்பைக்குத் தடையின்றிச் செல்ல ஏதுவானது.

சுவையறிந்து உண்ண வேண்டும்

சுவையறிந்து உண்ண வேண்டும்

உணவில் உள்ள இனிப்பான பண்டங்கள் மற்றும் கறிகளை முதலிலும், கசப்பு சுவையுடைய பண்டங்களை இறுதியிலும், மற்ற சுவைகளைக் கொண்ட உணவுகளை இடையிலும் உண்ண வேண்டும்.

இறால் தயிர் பிரியாணி செய்முறை !

நாம் உண்ணும் உணவில் அறுசுவை கூறுகளும் இருப்பது மிகவும் அவசியம். இனிப்புப் பண்டங்களை முதலில் எடுத்துக் கொள்ளும் போது உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும், செரிமானம் தூண்டப்படும். 

இந்தச் செயல்கள் உண்ட உணவு நன்கு செரிமானமாகி அடுத்த வேளை பசியெடுக்க உதவும். 

கசப்பான பொருள்களை உண்ட பிறகு மற்ற பொருள்களை உண்ணுவது சிரமம். ஆதலால் கசப்புச் சுவையை கடைசியில் உண்ண வேண்டும். 

இதற்கிடையில் மற்ற புளிப்பு, துவர்ப்பு மற்றும் உவர்ப்பு சுவையுடைய பொருள்களை உண்ணலாம்.

காலை உணவு எப்படி இருக்க வேண்டும்?

காலை உணவு எப்படி இருக்க வேண்டும்?

எளிதில் செரிமானமாகி உடலுக்கு நன்கு சக்தி அளிக்கக்கூடிய மிதமான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இட்லி, கஞ்சி வகைகள், நீராகாரம், ஆவியில் வேகவைத்த உணவுகள் சிறந்தவை.
மீன் புட்டு செய்முறை !

புளிப்புச் சுவையுடைய பழங்களைத் தவிர மற்ற பழங்களை காலையில் எடுத்துக் கொள்ளலாம். 

ஏனெனில் புளிப்புச் சுவையுடைய பழங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால் அவை வயிற்றுப் புண்ணை உண்டு பண்ணும் வாய்ப்புண்டு. 

அல்சர் இருப்பவர்கள் வாழைப்பழம், இளநீர், டீ மற்றும் காஃபி ஆகியவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

தொடர்ந்து காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. 

தும்பிலி மீன் குழம்பு செய்முறை !

நோய் எதிர்ப்பு ஆற்றலும் குறையும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் குறையும். எனவே, காலை உணவைத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறவேளை உணவுகள்

பிறவேளை உணவுகள்

மதிய உணவு என்பது இனிப்பு, பழங்கள், காய்கறிகள், பருப்பு சாம்பார், ரசம் மற்றும் மோர் என்ற வரிசையில், நிறைவான உணவாக இருப்பது அவசியம்.

இரவு உணவும், காலை உணவைப் போல எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருக்க வேண்டும். 

இறால் வறுவல் செய்முறை !

உணவுக்குப் பின் சிறிய நடைப்பயிற்சி சிறந்தது. இரவு உணவுக்குப் பின் டீ, காபி போன்ற பானங்களைத் தவிர்ப்பது நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை தரும்.

உணவு உட்கொள்ளும் அரைமணி நேரம் முன்பு டீ அல்லது காபி போன்ற எந்த ஒரு பானத்தையும் அருந்தக் கூடாது. 

அதே போல், உணவு அருந்திய பின் ஒரு மணி நேரம் இடைவெளி விட்ட பிறகு இது போன்ற பானங்களை அருந்த வேண்டும்.

உணவுக்குப் பின் சிறிய நடைப்பயிற்சி

இன்று பலர் அறுசுவைகளில் கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடைய உணவுகளை உண்பதில்லை. இது முற்றிலும் தவறு. 

அவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவை நன்கு மென்று, கூழாக்கி உமிழ் நீருடன் சேர்த்து விழுங்க வேண்டும். 

மீன் புளி வறுவல் செய்முறை !

உணவு உண்ணும் போது இடையிடையே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும். 

விருப்பமான உணவாக இருந்தாலும், வயிறு நிறைய உண்ணாமல் முக்கால் வயிறு அளவிற்கு உண்பதே நலம்'' என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)