எளிமையான வெஜிடபிள் இடியாப்பம் செய்வது எப்படி?





எளிமையான வெஜிடபிள் இடியாப்பம் செய்வது எப்படி?

0

முட்டைக்கோஸில் விட்டமின் பி-5 வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 

எளிமையான வெஜிடபிள் இடியாப்பம்

முட்டைகோஸ் சமைக்கும் போது அதன் வாசனை அதிகமாக வராமல் இருக்க அதனை வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டிய பிறகுதான் சமைப்போம். இனி அந்த தவறை செய்யாதீர்கள். 

ஏனென்றால் முட்டைக் கோஸ் வேகவைத்த நீரை குடிப்பதால் உடலுக்கு பலவித அற்புத நன்மைகள் இருக்கின்றன. கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். 

இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது. மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும். 

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவுகளில் ஒன்று இடியாப்பம். இதை உண்டால் செரிமானமாவது எளிது. 

அத்துடன் இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைத்து செய்வதால் வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவாக இருக்கும். 

இந்த இடியாப்பத்துடன் காய்கறி சேர்த்து செய்யும் போது இன்னும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையானவை: 

இட்லி அரிசி – 200 கிராம், 

கேரட் துருவல், வெங்காயத்தாள்  (பொடியாக நறுக்கியது), 

கோஸ் துருவல் – தலா ஒரு கப், 

பச்சை மிளகாய்  – ஒன்று (பொடியாக நறுக்கவும்), 

நெய் – 4 டீஸ்பூன், 

நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். 

வாணலியில் நல்லெண்ணெயை விட்டு, கரைத்து வைத்து இருக்கும் மாவை ஊற்றி, கெட்டியாகக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). 

கண் இமைப்பது ஏன்? கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா?

மாவு வெந்ததும் நன்கு பிசையவும். மாவை சிறிய பந்து அளவு உருண்டைகளாக உருட்டவும். 

அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போடவும் (உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்). 

உருண்டைகள் வெந்ததும் எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும் (உருண்டைகளை சரிபாதியாக ‘கட்’ செய்து பார்த்தால், மாவு வெள்ளையாக தெரியக்கூடாது. 

அது தான் சரியான பதம். மாவு தெரிந்தால் மேலும் சிறிது நேரம் வேக விட வேண்டும்). 

வாணலியில் நெய் விட்டு, கேரட் துருவல், நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன், கோஸ் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து… சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். 

தேங்காய் துருவல் இடியாப்பம் செய்வது எப்படி?

பிழிந்து வைத்திருக்கும் இடியாப் பத்துடன் வதக்கிய காய்கறி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)