தேவையானவை:
துவரம்பருப்பு – அரை கப்,
காய்ந்த மிளகாய் – 4,
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2,
புளி – நெல்லிக்காய் அளவு,
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு,
கொத்த மல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
துவரம் பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து… நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
காய் வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். வறுத்து பொடித்து வைத்திருக்கும் துவரம் பருப்பு – மிளகாய் பொடியை சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்த வுடன் நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும். இது… இட்லி, தோசையுடன் பரிமாற ஏற்ற சாம்பார்.