வாழைப்பூ உருண்டை பிரியாணி செய்வது எப்படி?





வாழைப்பூ உருண்டை பிரியாணி செய்வது எப்படி?

வாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். இதனை வாழை மொட்டு என்றும் அழைப்பதுண்டு. இவ்வாழைப்பூ உணவு சமைக்க காய்கறியாகப் பயன்படுத்தப் படுகிறது. 
வாழைப்பூ உருண்டை பிரியாணி  செய்வது எப்படி?
குழம்பு, அடை, சூப் போன்று பல்வேறு வகையான உணவுகள் வாழைப்பூவைக் கொண்டு செய்யப் படுகின்றன.

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால், ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும்.
தேவையானவை :

வாழைப்பூ உருண்டை செய்ய: 

வாழைப்பூ (மீடியம் சைஸ்) – ஒன்று,

இஞ்சி – ஒரு சிறு துண்டு,

பூண்டு – 6 பல்,

பச்சை மிளகாய்,

காய்ந்த மிளகாய் – தலா 2,

முந்திரி – 6,

பெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன்,

பொட்டுக் கடலை – அரை கப்,

தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்,

பொடியாக நறுக்கிய கொத்த மல்லித்தழை – சிறிதளவு,

பெரிய வெங்காயம் – 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்),

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. 

பிரியாணி செய்ய: 

பாசுமதி அரிசி – 2 கப்,

இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,

கொத்த மல்லித்தழை, புதினா – ஒரு கைப்பிடி அளவு ,

வெங்காயம் – 2,

நாட்டுத் தக்காளி – 3,

பச்சை மிளகாய் – 3,

பட்டை – சிறு துண்டு,

லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று,

தேங்காய்ப்பால் – 2 கப்,

உப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு. 
செய்முறை: 
வாழைப்பூ உருண்டை பிரியாணி செய்வது
வாழைப்பூ உருண்டை செய்யக் கொடுத்துள்ள பொருட்களில் வாழைப் பூவை நன்கு ஆய்ந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி யெடுக்கவும். 

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், முந்திரி, பெருஞ்சீரகம் ஆகிய வற்றை மிக்ஸியில் நைஸான விழுதாக அரைக்கவும்.

பொட்டுக் கடலையை மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். 

அகலமான பாத்திரத்தில் வாழைப்பூ உருண்டைக் கான அனைத்துப் பொருட்களை யும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து, நன்கு பிசிறி, சிறிய உருண்டை களாக உருட்டவும். 

எண்ணெயைக் காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருண்டை களை எண்ணெயில் போட்டு பொன்னிற மாக பொரித்தெடு க்கவும். 

பிரியாணி செய்யக் கொடுத்துள்ள பொருட்களில் கொத்த மல்லித்தழை, புதினாவை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். வெங்காயத்தை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். 
தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
பிறகு இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்த மல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தேங்காய்ப் பால், ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும். 

நீர் நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்க்கவும். நன்கு ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். 

குக்கரைத் திறந்ததும் நன்றாக கிளறி, பொரித்து வைத்துள்ள வாழைப்பூ உருண்டை களை சேர்த்துக் கலந்து சுடச்சுட பரிமாறவும்.
Tags: