பைனாப்பிள் பிரியாணி செய்வது எப்படி?





பைனாப்பிள் பிரியாணி செய்வது எப்படி?

0
ஆரம்ப காலத்தில், பிரியாணி என்பது இஸ்லாமிய நண்பர்களின் வீடுகளில் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு செய்து உற்றார் உறவினர்களின் வீடுகளுக்கு கொடுத்து மகிழ்வார்கள். 
பைனாப்பிள் பிரியாணி செய்வது
அதிகமாக இஸ்லாமிய சகோதர்கள் வீடுகளில் அதிகாமாக பிரியாணி செய்யும் வழக்கம் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதனால், முக்குக்கு முக்கு பிரியாணி விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது, பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப் படுவதுண்டு. 

மொத்தத்தில் பிரியாணி இன்றைய இந்தியாவின் தேசிய உணவாக மாறிவிட்டது. தற்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை விதவிதமான பிராணி வகைகள், நல்ல பொறப்பு தான் ருசித்து சாப்பிட கிடைத்துள்ளது. 
ஆரம்பத்தில், பாரசீகத்தில் காட்டில் வேட்டையாடும் விலங்குகளின் இறைச்சியையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டதுதான் பிரியாணியாக உருவானது. 
முதலில் வெறும் மசாலாக்களை மட்டுமே பயன்படுத்திய பாரசீகர்கள், நாளடைவில் நறுமணத்திற்காக பல வாசனைப் பொருட்களையும் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். 

தற்போது இறைச்சியை ஒன்றாக சமைத்து சாப்பிடுவதே பிரியாணி என்ற நிலை மாறி, காய்கறி, முட்டை, இறால் என் பல பொருட்களை வைத்து பிரியாணி செய்யப்படுகிறது. 

சரி இனி பைனாப்பிள் பயன்படுத்தி டேஸ்டியான பைனாப்பிள் பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை:

பச்சரிசி - 2 கப்,

வில்லை களாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6,

லெமன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை,

சர்க்கரை - ஒரு கப்,

மில்க்மெய்ட் - அரை கப்,

நெய் - 3 டேபிள் ஸ்பூன்,

ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை.
டச்ஸ்கிரீன்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா? வராதா?
செய்முறை:

பைனாப்பிளை மிக்ஸியில் நைஸாக அரைத்து நீர் சேர்த்து சக்கையை வடிகட்டி, 2 கப் அளவு சாறு தயாரித்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் பச்சரிசியை லேசாக வறுத்து, ஒரு கப் தண்ணீர், அரை கப் மில்க்மெய்ட், பைனாப்பிள் சாறு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

சர்க்கரையுடன் ஒரு டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கொதிக்க விட்டு பாகு வைக்கவும். அத்துடன் ஏலக்காய்த் தூள், லெமன் ஃபுட்கலர், நெய் சேர்த்து, சாதத்தையும் சேர்த்து எல்லாமாக ஒன்று சேர்ந்து வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:

சர்க்கரைப் பாகுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் நீர் மட்டும் போதுமானது. அப்போது தான் பாகு கெட்டிப்பதம் வரும். அன்னாசிபழம் சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தி, சுவாச மண்டலம், செரிமான தன்மை அனைத்துமே பலமாகும். 

இத்துடன் சேர்ந்து நம் உடல் எலும்புகளை பலப்படுத்துகிறது, வீக்கத்தை குறைக்கிறது. சளி மற்றும் இருமலை விரட்டுகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகள் அதிகம் உள்ளன. 

பொட்டாசியம், செம்பு, மாங்கனீஸ், கால்சியம், மக்னீசியம், வைட்டமின் C, பீடா கரோட்டின், தயாமின், வைட்டமின் B6,ஃபோலேட் மற்றும் பிரோமிலேன் ஆகியவை அடங்கிய பழம் தான் அன்னாசி. 
இட்லி, தோசை கடை மாவு நல்லதா கெட்டதா.. விழிப்புணர்வு !
கூடுதலாக இதில் கரையும் நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்து ஆகியவை உள்ளன. நம் தசைகள் மற்றும் மூட்டுக்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வை குறைக்கிறது. 

குறிப்பாக ஆர்த்தரிடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் அன்னாசிபழம் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். பிரோமிலேன் எனப்படும் ஒரு அரிய வகை என்சைம் அன்னாசி பழத்தில் இருக்கிறது. 

இது கலவை புரதத்தை உடைக்க உதவுகிறது மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. தொடர்ந்து அன்னாசி சாப்பிட ஆர்த்தரிடிஸ் பிரச்சனை நீங்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)