பால், மஞ்சள், மிளகின் ரகசியம் தெரியுமா?





பால், மஞ்சள், மிளகின் ரகசியம் தெரியுமா?

விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்ப வர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப் பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு. 
பால், மஞ்சள், மிளகின் ரகசியம்
குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வர வேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். 

இந்த வைத்தியத்தைத் தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடை பிடிக்கிறார்கள். மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான். 
பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க் கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது. 

அதே போல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது. 

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும் போது, இருமல், சளி சரியாகி விடும்.

பயன்கள் :

பாலில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது என்பது உண்மைதான். ஆனால், அதற்காக வளரும் குழந்தைகளுக்குப் பாலை மட்டுமே உணவாகக் கொடுக்கக் கூடாது. 

பாலை அதிகமாகக் குடிக்கும் குழந்தைகள் மற்ற உணவுகளைச் சாப்பிட மறுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு மற்ற உணவுகளின் மூலம் கிடைக்கும் புரதம் மற்றும் இரும்புச்சத்து கிடைக்காமல் போகும். 
இதனால் அடிக்கடி சோர்வு, எதிர்ப்பு சக்தியின்மை, எதிலும் ஆர்வம் இன்றி இருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, தினமும் குழந்தைகளுக்குக் காலை 100 மில்லி, மாலை 100 மில்லி என்ற அளவில் பால் கொடுத்தால் போதுமானது.

குழந்தைகளின் உடல் வளர்ச்சி அதிகரிக்க, உயரத்தை அதிகரிக்க எனக் கடைகளில் கிடைக்கும் புரதச்சத்து மாவுகளை வாங்கி பாலுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன?
சருமத்தின் அமைப்பை மேம்படுத்தி இயற்கை பளபளப்பை கொடுப்பதற்கு மஞ்சள் பெயர் போனது. மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் எரிச்சல் அடைந்த தோலை ஆற்றி அமைதிப்படுத்துகிறது.

மஞ்சளில் காணப்படும் ஒரு முக்கியமான ஆக்டிவ் காம்பவுண்டான குர்குமின், பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடி அழற்சி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. 
இதனால் இது முகப்பரு பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. முன்கூட்டியே வயதான சரும அறிகுறிகளால் சங்கடத்திற்கு ஆளானவர்கள் கட்டாயமாக மஞ்சள் தண்ணீரை தினமும் பருகி வருவதன் மூலமாக பலன் அடையலாம். 

மஞ்சளில் உள்ள ஆன்டி- ஆக்சிடன்ட்கள் முன்கூட்டிய வயதான அறிகுறிகளுக்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் சருமத்தில் உள்ள மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் குறைகிறது.
Tags: