என்னென்ன தேவை?
பச்சரிசி - 2 கப்,
உளுந்து, பால் - தலா 1/4 கப்,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க கடலை எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பச்சரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பால், சர்க்கரை, சிறிது உப்பு சேர்த்து நன்றாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்.
கடாயில் எண்ணெயை காய வைத்து ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும். இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுத்து சூடாக காரச் சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு :
அரிசி, உளுந்து இரண்டையும் அரைக்கும் பொழுது அரிசி தட்டுப் படாமல் மை போன்று அரைக்க வேண்டும்.