ஸ்பெஷல் மட்டன் உப்புக்கறி செய்வது எப்படி?





ஸ்பெஷல் மட்டன் உப்புக்கறி செய்வது எப்படி?

0
ஆயிரம் வகை உணவு இருந்தாலும் உப்புக் கறிக்கு ஈடாகாது. பழைய கஞ்சியை உப்புக் கறியோடு சாப்பிடும் போது சுவையே அலாதியாக இருக்கும். 
ஸ்பெஷல் மட்டன் உப்புக்கறி செய்வது எப்படி?
இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வெள்ளாட்டுக் கறி - ஒரு கிலோ

எண்ணெய் - 200 மில்லி கிராம்

சோம்பு - ஒரு டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 200 கிராம்

காய்ந்த மிளகாய் - 150 கிராம்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

தண்ணீர் - 150 மில்லி

சீரகம் - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, புதினா, கொத்த மல்லித் தழை - தேவைக்கேற்ப

உப்பு - தேவையான அளவு

செய்முறை :
ஸ்பெஷல் மட்டன் உப்புக்கறி செய்வது எப்படி?
கறியை நன்றாக சுத்தம் செய்து துண்டுக ளாக வெட்டி வைக்கவும். சின்ன வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மண்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் 

நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகிய வற்றைச் சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்த ஆட்டுக் கறியை போட்டு வதக்கவும். 

அடுத்து அதில் சீரகம், மஞ்சள் தூள், உப்பு ஆகிய வற்றைச் சேர்த்து மொத்தமாகக் கிளறி விடவும்.
தண்ணீர் ஊற்றி, கறி நன்றாக வேகும் வரை மண்சட்டியை மூடி வைக்கவும்.
சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் ஆட்டுக் கறியில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி 

கமகம மணத்துடன் உப்புக்கறி, நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்குத் தயாராகி இருக்கும்.

அந்த நேரத்தில், கொத்த மல்லி மற்றும் புதினா இலை களைத் தூவி, இறக்கி சிறிது நேரத்துக்குப் பிறகு சாப்பிடவும். சூப்பரான உப்புக்கறி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)